பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்..!

200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியது சிறந்த நிர்வாகத்தின் மற்றொரு மைல்கல் என பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பில்கேட்ஸ் ட்வீட். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்டோர்  எண்ணிக்கை இருநூறு … Read more

பிரதமரே, விவாதங்களையும், கேள்விகளை தவிர்ப்பதும் தான் பாராளுமன்ற விவாதமுறைக்கு எதிரானது – ராகுல் காந்தி

பிரதமரே, விவாதங்களையும், கேள்விகளை தவிர்ப்பதும் தான் பாராளுமன்ற விவாதமுறைக்கு எதிரானது என ராகுல் காந்தி ட்வீட். டெல்லியில் நேற்று நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்கியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தேவைப்பட்டால் விவாதம் நடத்த வேண்டும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்து சிந்தித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், … Read more

மத்திய பிரதேச பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது.! – பிரதமர் மோடி டிவிட்டரில் இரங்கல்…

மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   மத்திய பிரதேச மாநிலம் இந்தோரிலிருந்து புனே நோக்கி சென்ற பேருந்து தார் மாவட்டம் கல்காட் சஞ்சய் என்ற பகுதியில் உள்ள பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.  இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் … Read more

செஸ் ஒலிம்பியாட் – 19-ஆம் தேதி பிரதமருக்கு நேரில் அழைப்பு..!

வரும் 19-ஆம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து செஸ் – ஒலிம்பியாட் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு.  நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது பிரதமரிடம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், வரும் 19-ஆம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன்  … Read more

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய ஓபிஎஸ்..!

இலவச பூஸ்டர் டோஸ் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க … Read more

வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி அவர்கள் வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார்.  சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.  செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவை துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் வரும் 28-ஆம் தேதி சென்னை வருகிறார்.

பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்..!

பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.  இசையமைப்பாளர் இளையராஜா,பி டி உஷா, வீரேந்திர ஹெக்கடே மற்றும்  வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர்  மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது பி.டி.உஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட பி.டி.உஷாவுக்கு வாழ்த்துக்கள். நாடாளுமன்ற விவாதங்களில் … Read more

இந்தியாவில் ரெண்டு அக்யூஸ்டு இருக்காங்க..! ஒன்னு மோடி.. இன்னொன்னு அமித்ஷா..! – ராதாரவி

இந்தியாவில் ரெண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க. பெரிய அக்யூஸ்டுங்க. ஒன்னும் மோடி ஜி இன்னொன்னு அமித்ஷா என ராதாரவி பேச்சு.  சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்  பேசுகையில், அண்ணாமலை பாஷை தெரியாத கர்நாடகாவிலேயே கண்களில் விரலைவிட்டு ஆட்டியவர். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவோ திமுகவோ என்னும் நிலை வரும். 2024 ஆம் … Read more

அதிமுக லேடி வழியில் போகவில்லை, மோடி வழியில் தான் போகிறார்கள் – கி வீரமணி

அதிமுகவை பொறுத்தவரையில், பாஜக ஆட்டுகின்ற பொம்மலாட்டத்திற்குள் சிக்கியுள்ளதால், இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என கி.வீரமணி பேட்டி.  அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து திராவிட கழக தலைவர் கே.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவை பொறுத்தவரையில், பாஜக ஆட்டுகின்ற பொம்மலாட்டத்திற்குள் சிக்கியுள்ளதால், இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பொன்விழாவை அவர்கள் கொண்டாட வேண்டிய காலகட்டத்தில் புண்விழாவாக அதை மாற்றி கொண்டு, பல குழுக்களாக பிரிந்துள்ளனர். பாஜகவுடன் … Read more

இந்த கண்ணீரில் இருந்து வெளிவரும் நிராகரிப்பு உணர்வு பிரதமரின் கர்வத்தை உடைக்கும் – ராகுல் காந்தி

இந்த கண்ணீரில் இருந்து வெளிவரும் நிராகரிப்பு உணர்வு பிரதமரின் கர்வத்தை உடைக்கும் என ராகுல் காந்தி ட்வீட்.  மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இப்போராட்டம் வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர். ரயில்களுக்கு தீ வைப்பது மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராகில் காந்தி அவர்கள் தனது … Read more