ஸ்டெர்லைட் ஆலை மூடல் ..! மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ..!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் தகவல்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது  என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

Image result for ஸ்டெர்லைட்

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தூத்துக்குடி பொதுமக்கள் சிலர் தம்மிடம் தெரிவித்தனர்.மேலும் பொருளாதார பாதிப்பு தூத்துக்குடி மக்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்துக்கும் நல்லதல்ல என்றும்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Comment