மக்களிடையே பீதியை ஏற்படுத்த முயன்றதால் கருணாஸ் கைது ..!அமைச்சர் கடம்பூர் ராஜு

மக்களிடையே பீதியை ஏற்படுத்த முயன்றதால் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்  என்று  அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Related image

இது தொடர்பாக  அமைச்சர் கடம்பூர் ராஜு  கூறுகையில், மக்களிடையே பீதியை ஏற்படுத்த முயன்றதால் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்று பொறுப்பில் உள்ள கருணாஸ் போன்றோர், பிரச்சனையை தூண்டும் விதத்தில் பேசக்கூடாது.மேலும் எம்எல்ஏ என்பதால் கருணாஸின் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும். ஹெச்.ராஜா எம்எல்ஏவாக இல்லாததால் அவரது பேச்சுக்கள் மக்களிடம் பிரதிபலிக்காது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Leave a Comment