கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு 4,714 புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய முன்னாள் நீதிபதி…!

chandru

கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள், 4714 புத்தகங்களை நன்கொடையாக  வழங்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை நினைவை போற்றக்கூடிய வகையில், மதுரை புது நத்தம் சாலையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 114 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் 6 தளங்கள் கொண்ட நூலகமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த நூலகத்தில் 6 தளங்களிலும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறுகிறது. இந்த … Read more

ஹெச்.ராஜாவுக்கு ஒரே பதில்தான்..! வாய்ப்பில்ல ராஜா…! – சீமான்

Seeman

விஜயகுமார் பணிசுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாலே தற்கொலை செய்துள்ளார் என சீமான் பேட்டி.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம், எச்.ராஜா தமிழ் தேசிய புளியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும், திருமாவளவன் தமிழ் தேசியம் தோல்வியடைந்த ஒன்று, அது என்றைக்குமே வெற்றி பெறாது என தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், ஹெச்.ராஜாவுக்கு ஒரே பதில்தான், வாய்ப்பில்லை ராஜா. அண்ணன் திருமாவளவனுக்கு பொறுத்திருந்து பாருங்கள் … Read more

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், எம்.பி, எம்எல்ஏ உள்பட 238 பேர் மீது வழக்கு பதிவு!

congress case reg

சென்னை எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை கண்டித்து, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் … Read more

ஜொமேட்டோ, ஸ்விக்கி தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் காப்பீடு..! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு..!

Zomato

இ-காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி பணியாளர்களாக வேலை செய்பவர்களுக்கு ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடரில் அம்மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வரும், நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, 2013 முதல் 2018 வரை 6 பட்ஜெட்டுகளை அவர் முதல்வராக இருந்தபொழுது தாக்கல் செய்துள்ளார். இது அவரது ஏழாவது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் அமேசான், ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி பணியாளர்களாக … Read more

செல்ஃபோன் பறிப்பு சம்பவத்தால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்..! 2 பேர் கைது!

death

ரயிலில் செல்போனை பறிக்க முயன்றதால் தவறி விளைந்த மாணவி ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.  சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில், கடந்த 2-ஆம் தேதி ரயிலில் பயணம் செய்த இளம் மாணவி ப்ரீத்தியிடம் இரண்டு பேர் அவரிடம் இருந்து செல்போனை  பறிக்க முயற்சித்துள்ளனர். அப்போது அப்பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இது தொடர்பாக … Read more

தூத்துக்குடி விமான நிலையம் வந்த ஈபிஎஸ்…! அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி…!

Edappadi Palanisamy

தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை புரிந்த நிலையில், அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை புரிந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் கூடி இருந்தனர். அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தூத்துக்குடி வருகை புரிந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலில் … Read more

மணிப்பூரில் துப்பாக்கி சண்டை – 4 பேர் உயிரிழப்பு

gun shooting

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் இரு சமூகத்தினர் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 4 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட எழுந்த பிரச்சனை வன்முறையாக உருவெடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்தது. பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விடுத்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமையை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, கலவரம் மேலும் பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

Rain

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கேரளாவில் இன்றும், கர்நாடகாவில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை நிலவரம்: அடுத்த 24 மணி நேரத்திற்கு … Read more

செப்டம்பர் 15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முழுதாக முடிவடையும்.! சென்னை மேயர் பிரியா உறுதி.! 

Mayor Priya Rajan

செப்டம்பர் 15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முழுதாக முடிவடையும் என சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறினார்.  சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பணிகள் முழுவீசச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த வடிகால் கட்டுமான பணிகளை மேயர் பிரியா அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இது பற்றி கூறினார். அவர் கூறுகையில், சென்னையில் வடிகால் பணிகள் வரும் செப்டம்பர் 15க்குள் முழுதாக முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே போல தூர்வாரும் … Read more

எந்த காரணத்திற்காக டிஐஜி உயிரை மாய்த்து கொண்டார் என தெரியவில்லை -காவலர் ரவிசந்திரன்

dig

எந்த காரணத்திற்காக டிஐஜி உயிரை மாய்த்து கொண்டார் என தெரியவில்லை என டிஐஜி விஜயகுமாரின் பாதுகாவலர் ரவிச்சந்திரன் வாக்குமூலம்.  நேற்று காலை டிஐஜி விஜயகுமார் அவர்கள் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வைத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இடங்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் டிஐஜி விஜயகுமார் உடல் நேற்று மாலை 5 மணி அளவில் அரசு மரியாதையுடன் தகனம் … Read more