செல்ஃபோன் பறிப்பு சம்பவத்தால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்..! 2 பேர் கைது!

ரயிலில் செல்போனை பறிக்க முயன்றதால் தவறி விளைந்த மாணவி ப்ரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. 

சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில், கடந்த 2-ஆம் தேதி ரயிலில் பயணம் செய்த இளம் மாணவி ப்ரீத்தியிடம் இரண்டு பேர் அவரிடம் இருந்து செல்போனை  பறிக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது அப்பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இது தொடர்பாக கொள்ளையர்கள் விக்னேஷ் மற்றும் மணிமாறன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.