ஃபேஸ்புக்(Face book) அதிரடி எச்சரிக்கை: பொய் பதிவுகளை(Fake news) போடுபவர்களுக்கு.

சமூக வலைத்தளங்கள் (Social Networking Platforms) ஒவ்வொரு நாளும் அதன் குறைகளை கண்டுகொண்டு பின்னர் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு அவ்வப்போது சிறப்பம்சங்களை கொடுத்து நெட்வொர்க்கிங் தளத்தினை மெருகேற்றி வருகின்றன‌.

ஃபேஸ்புக் நிறுவனம் இதப்பற்றி கூறியதாவது: பொய் செய்திகளை பரப்பும் பக்கங்களில் விளம்பரங்களை நிறுத்துவதன் மூலம் பொய் செய்திகள் மற்றும் வதந்திகள் குறைய வாய்ப்புகள் உல்ளன‌. மேலும் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுபவர்களுக்கு இதுவொரு பாடமாக அமைய‌ வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள்து. அது போலத்தான் மற்றொரு நபர் கூறிய கருத்துக்களை திரும்ப திரும்ப பதிவு செய்பவர்களுக்கும் விளம்பரம் தடை (கட்) செய்யப்படும் என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.

ஃபேஸ்புக் அதன் கோட்பாடுகளில் மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்கின்றது.   1. புரளிகளைப் பரப்புவதன் மூலம் பொருளாதாரத்தை  மாற்றுவது.

2.தவறான செய்திகளை முன்வைத்து புதிய பொருள் ஒன்றை ஊக்குவிப்பதை தவிர்ப்பது

3. தவறான செய்திகளை பதிவிட்டு மக்களிடம் இருந்து சலுகைகள் அல்லது நிதி பெறுதலை தடுத்து நிறுத்துவது.

இந்த தவறுகளை இனி ஃபேஸ்புக்கில் போடமுடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறுகிறது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Facebook (Facebook) Action Warning: Fake news.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment