மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு.! கேரளா உயர்நீதிமன்றம் கண்டனம்.! காவல்துறைக்கு கடும் உத்தரவு.!

முழு அடைப்பின் போது அரங்கேறிய கல்வீச்சு, பேருந்துகள் சேதம் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக கண்டங்களை பதிவு செய்துள்ளது கேரள உயர்நீதிமன்றம். மேலும் பொதுச்சொத்துக்களை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள கேரள காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ நேற்று நாடு முழுவதும் சோதனை நடத்தியது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் தான் இந்த சோதனைகள் நடைபெற்றது. அதன் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் அதிமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கை … Read more

என்.ஐ.ஏ சோதனை.! கேரளாவில் கடையடைப்பு.. கல்வீச்சு.! தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்.!

நாடுமுழுவதும் என்.ஐ.ஏ அமைப்பினர் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் பிரண்டு ஆப் இந்தியா அமைப்பினர் நடத்தும் கடையடைப்பு போராட்டத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதால், தமிழக பேருந்துகள் கேரளாவுக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ நேற்று நாடு முழுவதும் சோதனை நடத்தியது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதன் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் அதிமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கை … Read more

அவசர தேவை என நிலத்தை பறிப்பது தவறு.! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.!

உரிய முறைப்படி வசித்து வரும் குடியிருக்கும் வாசிகள் நிலங்களை அவசரகால உத்தரவு என அவர்களின் நிலங்களை கையகப்படுத்துவது தவறு- மதுரை உயர்நீதிமன்றம் கருத்து. தஞ்சாவூரில் விமான படை பயிற்சி தளம் அமைப்பதற்காக, தேவைப்பட்ட அப்பகுதி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக மாற்று இடம் கேட்டு, நிலத்தை கொடுத்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக, அவசரகால தேவை என ஏற்கனவே குடியிருக்கும் குடியிருப்புவாசிகளின் நிலங்களை கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர். இதனை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டிருந்தது. … Read more

திமுக எம்பி மீதான நிலஅபகரிப்பு வழக்குகள் ரத்து.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் அமைந்துள்ள குரோம்பேட்டை லெதர் ஃபேக்டரியை தற்போதைய அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் வாங்கியது தொடர்பாக புகார் எழுந்தது. குவிந்தன் தாசன் என்பவர் நிலஅபகரிப்பு அடிப்படியில் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் 2 வழக்குகள் பதிந்து வழக்கை விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

தமிழ்நிலம் இணையதளத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நிலம் எனும் இணையதளம் மூலம் பட்டா மாறுதல்களுக்கு இணையத்தளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கபட்டுள்ள்ளது.  சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த உடன், அடுத்தபடியாக, அந்த சொத்தின் பட்டாவை மாற்றம் செய்ய வேண்டும். வாங்கப்பட்டு சொத்து எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது, என்பதை அறிந்து, அந்த பகுதி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பங்கள் மட்டுமே இணையதளத்தில் கிடைக்கின்றன. தற்போது … Read more

மாநில உரிமைகளை பறிக்காதீர்கள்..! பிரதமர் மோடிக்கு தமிழக முதலவர் ஸ்டாலின் கடிதம்.!

துறைமுக மசோதா 2022இல் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த அம்சங்களை நீக்க கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் புதியதாக கூறப்பட்டுள்ள துறைமுக மசோதா பற்றியும் அதில் உள்ள அம்சங்கள் பற்றியும் கோரிக்கைளை வைத்துள்ளார். அதில், ஸ்டாலின் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘ இந்திய துறைமுகங்கள் மசோதா 2022இல் உள்ள அம்சங்கள் மாநில அரசின் உரிமைகளை … Read more

தமிழ்நாட்டின் கடன் குறைந்துள்ளது.! வளர்ச்சி பாதுகாப்பாக இருக்கிறது.! தமிழக நிதியமைச்சர் தகவல்.!

பணவீக்கமானது மற்ற மாநிலங்களில் 7 சதவீதத்திற்கும் மேல் உள்ளது.  ஆனால், தமிழகத்தில் அது 5ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான கடனை குறைத்துள்ளோம்.  என பல்வேறு நிதி நிலைமையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.   தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் நிதிநிலையை மக்களுக்கு எடுத்துரைத்தார். அதில் பல்வேரு முக்கிய நிதி அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. அதில்,, ‘ தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒத்துழைப்பு … Read more

சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. பிரமாண்ட விமானநிலையம் விரைவில் தயார்.!

2400 கோடி செலவில் மேம்படுத்தப்படும் சென்னை விமான நிலைய பணிகள் விரைவில் நிறைவடைந்து வரும் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி மாதத்திலோ பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்து திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.   சென்னை, மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள விமானநிலையத்திற்கு அன்றாடம் பயணிகளின் வரத்தும், விமானங்களின் வரத்தும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை சரிப்படுத்த, விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 2,400 கோடி செலவில் விமான நிலையத்தில் முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. … Read more

நாடு முழுவதும் என்.ஐ.ஏ சோதனை.! ராகுல் காந்தி கடும் கண்டனம்.!

நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘ மதவாதமும், வன்முறையும் எந்த வடிவில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.’ என தனது கண்டனத்தை தெரிவித்தார்.  தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலகம் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிரடி சோதனையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஈடுபட்டது. பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் தமிழகத்தில் 10 பேர் உள்பட … Read more

கன்னியாகுமரியில் கனிமவள கொள்ளையா.? பொன் ராதாகிருஷ்னன் உடன் விவாதிக்க தயார்.! தமிழக அமைச்சர் சவால்.!

கன்னியாகுமரியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து பொது மேடையில் விவாதிக்க தயார் என தமிழக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பதில் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் கனிம வள கொள்ளையில் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பெயர் சரித்திரத்தில் நிலைத்து இருக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அண்மையில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், தமிழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் கடமையை … Read more