ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனு..! இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்..!

ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அந்த பொதுக்குழு கூட்டத்தில், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. அதன்படி, ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி தரப்பு தீர்ப்பளித்தது. … Read more

யூடியூபில் வியூஸ்களை அதிகரிக்க பொய்யான தகவலை பரப்பிய நபர் கைது…!

யூடியூப் பக்கத்தில் தவறான தகவலைகளை பரப்பி, அதிகமான வியூஸ்களை பெற்று வந்த ஐ.டி ஊழியர் கைது.  இன்று பலரும் யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில் பலர் வருமானம் ஈட்டியும் வருகின்றனர். அந்த வகையில், சிலர் தாங்கள் அதிகமான வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்ற ஐ.டி ஊழியர் தனது யூடியூப் பக்கத்தில் தவறான தகவலைகளை பரப்பி, அதிகமான வியூஸ்களை பெற்று … Read more

கல்வி Costly -ஆக இருந்தால், Scholarship தயாராக இருக்கிறது – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

காஞ்சிபுரம் IIITDM கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்துள்ளது. உலகம் எங்கு முன்னேறுகிறது. எந்த தொழில்நுட்பம் நோக்கி நகர்கிறது என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை கல்விக்கான சேமிப்புக்காக பெற்றோர் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில் … Read more

கல்யாணமானாலும் கிரிக்கெட் விளையாட -அனுப்பனும் நண்பனுக்காக அக்ரீமெண்ட் போட்ட நண்பர்கள்..!

திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் மணமகளிடம் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்.  மதுரையை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும், தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் மதுரையில் கோலாகலமாக திருமணம்  நடைபெற்றது. மணமகன் ஹரி பிரசாத் கிரிக்கெட்  கொண்டவர். இந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு வந்த ஹரிபிரசாத்தின்  நண்பர்கள், திருமணத்திற்கு பின்னும் எங்களது நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ரூ.20 பத்திரத்தில் மணமகள் பூஜாவிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்.

பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவை ஒட்டி வி.கே.சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் மாற்றம்

பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவை ஒட்டி வி.கே.சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டனின் புதிய  பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், எலிசபெத் ராணியின் இறுதி சடங்கு இன்னும் ஒரு வாரத்திற்கு பின் தான் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவை ஒட்டி வி.கே.சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் … Read more

இன்னும் 24 மணி நேரத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! – வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், காற்றழுத்த தாழ்வு பகுதி. ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்றும், இது இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும்,தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாளைக்கு கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, … Read more

நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகளுக்கு திமுக தான் காரணம் – அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எந்த மாநில முதலமைச்சர்களும் நீட் வேண்டாம் என எதிர்க்காத போது; தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் நீட் வேண்டாம் என எதிர்த்து, மாணவர்களின் மன தைரியத்தை உடைத்து வருகிறார். நீட் வேண்டாம் என திமுக சொன்னாலும்,தேர்வு இருக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு தங்களது மனதை மாற்றிக் கொள்ள வேண்டும்; டீ மாஸ்டரின் மகள் கூட தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை … Read more

கலைஞர் நூலகம் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காட்டவில்லை – ஆர்.பி.உதயகுமார்

கலைஞர் நூலகம் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காட்டவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றசாட்டு.  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி மதுரை திருமங்கலம் தொகுதியின் 10 முக்கிய பிரச்னைகள் அடங்கிய பட்டியலை அம்மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை காட்டி வாக்கு சேகரித்து வெற்றி பெற்ற திமுக, ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. முதலமைச்சர், கலைஞர் … Read more

மனசாட்சியோடு யோசித்துப் பார்த்திருந்தால் தி.மு.க அரசுக்கு இதெல்லாம் புரிந்திருக்கும் – டிடிவி தினகரன்

மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட்.  புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. … Read more

மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்வு – அன்புமணி ராமதாஸ்

மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது என அன்புமணி ட்வீட்.  புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டண உயர்வு இன்று முதல் … Read more