6 பேரின் உடலுக்கு ஒருவாரம் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது!வழக்கு ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று  சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு, வன்முறை சம்பவங்களில் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் நீதிபதிகள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 7 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 6 பேரின் உடல்கள் இன்னும் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை.

இந்நிலையில் சற்று முன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது .அரசு மருத்துவர், ஒரு தடயவியல் மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது .இந்நிலையில் தற்போது  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் எஞ்சியுள்ள 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று  சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். 3 மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும். எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கட்டாயம் இருக்க வேண்டும். உடற்கூறாய்வுக்கு பிறகு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் ஒருவாரத்துக்கு 6 பேரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதிட்ட நிலையில் உத்தரவிட்டுள்ளது. தங்கள் தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேதப் பரிசோதனை செய்தால் தடயங்கள் அழிக்கப்படும் என்று வழக்கறிஞர் சங்கரசுப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனை முடிந்த 7 பேரின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில், பிரேத பரிசோதனை செய்த உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்த பின் உடலை கேட்டால் உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்  சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

 

Leave a Comment