மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு?

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை  அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேராசிரியை மற்றும் அவருடன் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வரும் நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பின்னர் துணைவேந்தர் செல்லத்துரை, சிண்டிகேட் உறுப்பினர் திவாகர் 5 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் குறித்தும், அவருக்கும் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment