எங்களுக்கும் கோவை மாணவி உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை! தேசிய  பேரிடர் மேலாண்மை ஆணையம் 

தேசிய  பேரிடர் மேலாண்மை ஆணையம் பயிற்சி அளித்தவர் என்டிஎம்டிவை சேர்ந்தவர் இல்லை என  விளக்கம் அளித்துள்ளது.மேலும்  பேரிடர் பயிற்சியில் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும்  கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் தொடர்பில்லை .பயிற்சியின்போது மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோயம்புத்தூரில் அருகே நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் மாணவி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment