ஆட்சிக்கு வரப்போவதில்லை என அண்ணன் பழனிசாமிக்கு தெரியும் – டிடிவி தினகரன்

திமுக 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இலவச வாஷிங்மெஷின் போன்ற திட்டங்களை நிறைவேற்ற மாதந்தோறும் ரூ.5,000 கோடியும் வருடத்திற்கு 50 முதல் 60 கோடி ரூபாய் தேவைப்படும். பணத்திற்கு எங்கே செல்வார்கள் என்று கேள்வி எழுப்பி, வாஷிங்மேஷனில் வாஸ் பண்றதுக்கு கூட தண்ணீர் இல்லை என விமர்சித்துள்ளார். மீண்டும் ஆட்சிக்கு … Read more

அமமுக வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு நிபந்தனை ஜாமின்..!

திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த‌தாக திருமங்கலம் தொகுதி அமமுக வேட்பாளர் ஆதி நாராயணன் மீது வழக்கு தொடரப்பட்டது.  இதைத்தொடர்ந்து, வருவாய் துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தன் மீது உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பப்பட்டுள்ளது. வழக்கில் விசாரணை செய்யாமல் தன்னை போலீசார் கைது செய்யக்கூடாது என ஆதி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரியிருந்தார். … Read more

இந்த இரு நாடுகளில் எனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது – கடம்பூர் ராஜூ

டிடிவி தினகரனிடம் கையெழுத்து வாங்க வேண்டுமானல் சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும் என்று கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டிடிவி தினரகனுக்கு ஆதவராக தேர்தல் பரப்புரை செய்யும் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா, எனக்கு சிங்கப்பூர், மலேசியாவில் ஹோட்டல்கள் இருப்பதாக மக்களிடம் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார். எனது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை வேட்புமனுவில் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன். எனவே … Read more

திமுக கூட்டணி தீய சக்தி; ஆளுங்கட்சி கூட்டணி துரோக சக்தியை தோற்கடிக்க வேண்டும்- டிடிவி தினகரன்..!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். திருவண்ணாமலையில் அமமுக மற்றும் கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் இருவரையும் ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அமமுகவுக்கு வாய்ப்புத் தரும் விதமாக மக்கள் வாக்களிக்க வேண்டும். திமுக கூட்டணி தீய சக்தி; ஆளுங்கட்சி கூட்டணி துரோக சக்தியை தோற்கடிக்க வேண்டும். அதிமுகவும், பாஜகவும் தமிழ் மக்களுக்குத் தீங்கு விளைவித்து வருவதாகவும், அதனால் அவர்களை மக்கள் புறம்தள்ளும் … Read more

ருசி கண்ட பூனையைபோல் பதவி வெறி பிடித்து திமுகவினர் சுற்றுத் திரிகின்றனர் – டிடிவி தினகரன்

திமுக ஆட்சிக்கு வரும் சூழல் நிலவினால், மக்கள் ரோட்லகூட நடக்க முடியாது என்று டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார். திருச்சி முசிறியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஊழல் என்றால் திமுக பெயர் தான் ஞாபகம் வரும். விஞ்ஞான முறையில் ஊழல் செய்கிறது திமுக தான். ஆகையால், மறுபடியும் வாய்ப்பு கிடைக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். தற்போது தமிழகத்தில் சுமார் 6 லட்சம் கோடி கடன் உள்ளது. முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் … Read more

எனக்கு சால்வை, பூங்கொத்து, பரிசுப்பொருட்கள் வேண்டாம் – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வீசி வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் … Read more

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக அமமுக வரும் – டிடிவி தினகரன்

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆற்றில் கூட மண் இருக்காது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவிடைமருதூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக, திமுகவுக்கு மாற்று கட்சியாக அமமுக வரும். ரூ.1000, ரூ.1,500 தருவோம் என ஏலம் போடுகிறார்கள். ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என குற்றசாட்டியுள்ளார். எங்களால் செய்ய முடிந்தவற்றை, சொல்கிறோம். மற்றவர்களை போல் பொய் சொல்லவில்லை என கூறியுள்ளார். மேலும், திமுக … Read more

திருமங்கலத்தில் ஆர்பி.உதயகுமார், அமமுக கூட்டணி வேட்பாளர் ஆதி நாராயணன் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு.!

மதுரை திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்பி உதயகுமாரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்பி உதயகுமார், இரண்டு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் என்றும் அந்த 2 வேட்புமனுவிலும் இருவேறு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் அதனை முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. எனவே, இது விதிமுறை மீறல் என்ற குற்றசாட்டை முன்வைத்து எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் கடித்தது அளித்திருக்கிறார்கள். இதன் … Read more

#BREAKING: நெல்லையில் அமமுக வேட்பாளர் மனு நிராகரிப்பு..!

நெல்லை அமமுக வேட்பாளர் பால்கண்ணன் வேட்புமனு நிராகரிப்பு. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேடர்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. அதைப்போல கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தல், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் … Read more

தீய கட்சியான திமுக.., துரோக கட்சியான அதிமுகவை வீழ்ந்துவதே எங்களது நோக்கம் – டிடிவி தினகரன்..!

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக – அமமுக கூட்டணி உறுதியான நிலையில் முதல் முறையாக விஜயகாந்தை டிடிவி தினகரன் சந்தித்தார்.  அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வராமல் குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினர். இதனால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது. பின்னர், தேமுதிக நீண்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகு அமமுகயுடன் கூட்டணி அமைத்தது. அமமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான வேட்பாளர் … Read more