எல்லையில் பரபரப்பு!! நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைது !!

ஓசூரில் நாம் தமிழர் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம்  மாநில எல்லை முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் லால் (( LAL )) பேருந்து நிறுத்தத்திலிருந்து இ.எஸ்.ஐ மருத்துவமனை வரை ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர்.  கர்நாடக – தமிழக எல்லையை முற்றுகையிடும் நோக்கில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சோதனைச் சாவடியைத் தாண்டி கர்நாடக எல்லைக்குள் நுழைய முயன்றவர்களை சத்தியமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment