இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா..!டி.டி.வி .தினகரன் சவால்

திமுக,காங்கிரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் என அதிமுக கூறிக்கொண்டு என்னைப் பற்றிதான் அத்தனை மேடைகளிலும் பேசினார்கள் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி .தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி .தினகரன் கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வரும்வரை நீதிபதிகளின் கருணையால் இந்த ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது.அதிமுக திருவாரூரில் டெபாசிட் வாங்காது. திருப்பரங்குன்றத்திலும் வாங்க விடமாட்டோம்.பாஜக,திமுக தவிர வேறு கட்சிகளுடன் தான் எங்கள் கூட்டணி அமையும்.சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதற்காக பாஜகவை எதிர்க்கவில்லை, எனது இயல்பே அதுதான்.அதிமுக திருப்பரங்குன்றத்திலும் திருவாரூரிலும் டெபாசிட் வாங்காது வாங்காது.திருவாரூர் இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு டெபாசிட் வாங்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment