செல் போனுக்கு சார்ஜ் வேண்டும் என்று “விமானி அறைக்குள் நுழைந்த பயணி “

இண்டிகோ விமானத்தில் செல்போனுக்கு சார்ஜ்  செய்வதற்காக விமானிகள் அறைக்குள் நுழைய முயன்ற பயணி மும்பை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த 24ஆம் தேதி இண்டிகோவின் 6E-395 என்ற விமானம் மும்பையில் இருந்து கொல்கத்தா புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் ஏறிய பயணி ஒருவர் செல்பனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறி, விமானிகள் அறைக்குள் நுழைய முயன்றார். விமானிகள் அறைக்குள் நுழைய முயல்வது பாதுகாப்பு விதிகளை மீறும் செயல் என்பதால், அவரை ஊழியர்கள் இறக்கி விட்டனர். பின்னர் விமான நிலைய போலீசாரிடம் அந்தப் பயணி ஒப்படைக்கப்பட்டார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment