“16 வயதில் பாலியலுக்கு ஆளாக்கப்பட்டேன்” இந்திய அழகி லட்சுமி..!!

16 வயதில் தமக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை தற்போது சொல்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய மாடல் அழகி பத்ம லக்ஷமி மனம் திறந்துள்ளார்.உச்சநீதிமன்றத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்த நீதிபதிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய டிரம்ப், இத்தனை வருடம் அந்த பெண் அமைதியாக இருந்து விட்டு தற்போது புகார் கூறக் காரணம் என்ன என்று வினவியிருந்தார். இந்த நிலையில், 16 வயதில் தமது நண்பர் ஒருவர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்மையில் பத்ம லக்ஷமி கூறி இருந்தார்.

சிறு வயதில் பாலியல் தொல்லை அனுபவித்த போது பெற்றோரிடம் கூறியதால், அவர்கள் தம்மை இந்தியாவுக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும், எனவே அடுத்ததாக தமக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதில் எந்த பயனும் இல்லை என்று நினைத்தே அமைதி காத்ததாகவும் குறிப்பிட்டார். தாம் நினைத்தது போலவே, நீதிபதி மீது புகார் கூறிய பெண்ணும் நினைத்திருக்கலாம் என்றும் பத்ம லக்ஷமி தெரிவித்துள்ளார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment