மின்வாரியத்துக்கு நிதிநிலைமைக்கு ஏற்ப பட்ஜெட்டில் நிதி !

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, நிதி நிலைமைக்கு ஏற்ப தமிழக பட்ஜெட்டில் மின்சார வாரியத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நிதி குறைப்பால் வாரியத்துக்கு பாதிப்பு இல்லை என்றும்  கூறியுள்ளார்.

நாமக்கல்லில் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வேளாண்மைக் கண்காட்சியினை திறந்து வைத்து அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில், விவசாயிகள் சாகுபடி செய்துவரும் பாரம்பரிய ரகங்களான நெல், கம்பு, திணை, வரகு, காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் அதன் பராமரிப்பு குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, மின்வாரியத்தில் ஏற்பட்ட நட்டம் குறைந்து வருவதால் பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment