ஃபேஸ்புக் நிறுவனத்தில் ரகசிய விசாரணை பிரிவு நிறுவனம் குறித்த தகவல்களை கசிய விடும் பணியாளர்களை கண்டுபிடிக்க நிறுவப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஃபேஸ்புக்கில் பணியாற்றிய ஒரு நபர் அலுவல கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு உள்ளார். பதவி உயர்வுக்காக அழைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த நபர் மகிழ்ச்சியுடன் சென்ற நிலையில், அலுவல் மற்றும் நிறுவனம் சார்ந்த தகவல்களை பத்திரிக்கையாளர் ஒருவரிடம் தாம் பகிர்ந்து கொண்ட அனைத்து ஆதாரங்களும் மேசையில் இருப்பது கண்டு அதிர்ந்துள்ளார்.
அப்போது தான் அந்த நபருக்கு ரகசிய விசாரணை பிரிவு செயல்பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. நிறுவனத்திற்குள் நடக்கும் விவகாரங்கள் தெரியாமல் இருப்பதற்காக அனைத்து நிறுவனங்களும் இதை கடைபிடிப்பதாக ஃபேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.