விரைவில் தண்டனை கிடைப்பது உறுதி -“திஷா” காவல் நிலையத்தை தொடங்கி வைத்த ஆந்திர முதல்வர் பேச்சு

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோதாவரி மாவட்டத்தில் “திஷா” காவல் நிலையத்தை  தொடங்கி வைத்தார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் சமீபத்தில்  பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து என்கவுண்டர் செய்தனர்.பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10-வது நாளில் குற்றவாளிகளை  என்கவுண்டர் செய்தது. பலரும் ஆதரவும் கொடுத்தனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.  என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு ஆந்திர … Read more

அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினம் மாற்றம்.! இன்று மசோதா தாக்கல்.!

ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசு  மசோதா ஒன்றை உருவாக்கி உள்ளது. 175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 151  இருப்பதால் இந்த மசோதா எளிதில் நிறைவேறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின் ஆந்திராவின் தலைநகராக அமராவதி மாற்றப்பட்டது. மேலும் அமராவதியை சர்வதேச தரத்தில் மாற்றுவதற்கு  சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் கடந்த மே மாதம் … Read more

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி ஆஜராக வேண்டும் – சிபிஐ நீதிமன்றம்.!

சிபிஜ  2012 -ம் ஆண்டு மே மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்தனர். இதையடுத்து 16 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார். ஆந்திர மாநில முதலமைச்சரும் , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2011 -ம் ஆண்டு  வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக கூறி … Read more

இன்று ஆந்திர முதலமைச்சர் ஜெகனுக்கு பிறந்த நாள்

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக உள்ளவர் ஜெகன் மோகன் ரெட்டி. இன்று இவருக்கு பிறந்த நாள் ஆகும்.  ஜெகன் மோகன் ரெட்டியின் முழுபெயர் எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி ஆகும்.இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார்.ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் டிசம்பர் 21 ஆம் தேதி , 1972 -ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவந்தலா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை எ.சா. … Read more

நம்பர் பிளேட்டிற்கு பதிலாக முதலமைச்சர் பெயரை வைத்த இளைஞர் கைது..!

ஹைதராபாத்தில் கார் ஒன்றில் முன் பகுதியில் இருக்கும் நம்பர் பிளேட்க்கு பதிலாக ஏ.பி      சி.எம் ஜெகன் என ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட நம்பர் பிளேட் இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த காரை ஓட்டி வந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கிழக்கு கோதாவரி சார்ந்த பி.டெக் பட்டதாரி ஹரி ராகேஷ் என்பது தெரியவந்தது.இவர் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக ஏன் இப்படி ஆங்கில எழுத்து கொண்ட பிளேடை வைத்து உள்ளீர்கள்.? எனக் … Read more

தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் ஆந்திராவில் உள்ளவர்களுக்கே-ஜெகன் அரசு அதிரடி

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு  அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆந்திர சட்டமன்றத்தில் புதிதாக சட்டம் ஓன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.அந்த சட்டத்தில்  75% தனியார் வேலைவாய்ப்புகள், ஆந்திர மக்களுக்கே அளிக்கப்படும். இந்தச்சட்டத்தின்படி மொத்தப் பணியிடங்களில் 75% இடங்களை தனியார்  … Read more

நான் யாருக்கு எதிராகவும் செயல்படமாட்டேன்-ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி- ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.அதன்படி வருகின்ற 30 ஆம் தேதி முதலமைச்சராக பதிவு ஏற்க உள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. நேற்று ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்தார். இதன் பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களை … Read more