நம்பர் பிளேட்டிற்கு பதிலாக முதலமைச்சர் பெயரை வைத்த இளைஞர் கைது..!

ஹைதராபாத்தில் கார் ஒன்றில் முன் பகுதியில் இருக்கும் நம்பர் பிளேட்க்கு பதிலாக ஏ.பி      சி.எம் ஜெகன் என ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட நம்பர் பிளேட் இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த காரை ஓட்டி வந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கிழக்கு கோதாவரி சார்ந்த பி.டெக் பட்டதாரி ஹரி ராகேஷ் என்பது தெரியவந்தது.இவர் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக ஏன் இப்படி ஆங்கில எழுத்து கொண்ட பிளேடை வைத்து உள்ளீர்கள்.? எனக் கேட்டதற்கு அவர் அளித்த பதில் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர், சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் காவல்துறை சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக இதுபோன்று வாகனத்தின் நம்பர் பிளேட்டிற்கு பதிலாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரை பயன்படுத்தியதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.