40 படகுகள் எரிந்து நாசம்… கொழுந்துவிட்டு எரிந்த விசாகப்பட்டினம் துறைமுகம்.!

Visakapattinam Fire Accident

ஆந்திர பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு ஒரு படகில் தீ பற்றியது. ஒரு படகில் பற்றிய தீ மளமளவென அடுத்தடுத்த படகில் பற்றியது. இதன் காரணமாக மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 35 முதல் 40 ஃபைபர் மீன்பிடி படகுகள் தீயில் எரிந்து நாசமாகின. படகுகளில் டீசல், எரிவாயு சிலிண்டர் ஆகியவை இருந்ததால் தீ அடுத்தடுத்த படகுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. தீ பற்றியது தெரிந்த உடன் தீயணைப்பு துறையினருக்கு … Read more

பைக்கின் பெட்ரோல் டேங்கில் காதலனுடன் கட்டிப்பிடித்தபடி அமர்ந்து சென்ற காதலி! கைது.!

ஆந்திராவில், பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டு சென்ற காதலர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டு சென்றுள்ளனர், 19 வயது சிறுமி, தன் 22 வயது காதலனுடன் பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து கட்டிப்பிடித்தபடி இருவரும் சென்றுள்ளனர். இதனால் இவர்கள் மீது கவனக்குறைவாக வாகனம் ஒட்டிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. … Read more

#INDvsSA:பந்து வீச்சில் தெறிக்க விட்ட ஹர்ஷல்,சாஹல்;முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா!

தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில்,டி20 தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல்,குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர்.ஏற்கனவே,அணியில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், முக்கிய வீரராக கருதப்பட்ட கேப்டன் ராகுலும் தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. கேஎல்ராகுல் விலகியதால்,இந்திய அணிக்கு ரிஷப் பந்த் … Read more

#INDvsSA: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

முதல் 2 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில், தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர். ஏற்கனவே, … Read more

விசாகப்பட்டினம் HPCL ஆலையில் திடீர் தீ விபத்து!

விசாகப்பட்டினத்தில் உள்ள HPCL எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே மல்கா புரத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆலையில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வண்டிகளில் வந்து தீயை அணைத்துள்ளாரம் மேலும், இந்த இடத்திற்கு இந்திய கடற்படையை சேர்ந்த வல்லுநர் குழுவும் விரைந்து வந்து தீயை அணைத்து உள்ளது. இதனையடுத்து தீ கட்டுக்குள் … Read more

விசாகப்பட்டினம்: ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 11ஆக உயர்வு.!

ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நகரில் இன்று  ஒரு பெரிய கிரேன் இடிந்து விழுந்ததில் 11 பேர் மரணம் மற்றும் ஒருவர் காயம் என தகவல். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் 60 அடி ராட்சத கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அங்கு 20 தொழிலாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மதியம் 3 மணி அளவில் 10 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் இடிபாடுகளின் … Read more

#BREAKING: ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் ராட்சத கிரேன் விழுந்து விபத்து.. 6 பேர் உயிரிழப்பு .!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் 60 அடி ராட்சத கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும்  மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணியில் மீட்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். The moment the crane crashed in #Visakhapatnam. Meanwhile toll rises to 6. Minister Avanthi Srinivas spoke to Hindustan … Read more

ஆந்திராவில் தடம் புரண்ட 4 ரயில் பெட்டிகள்.!

ஆந்திராவில் கடற்படை கப்பல்துறை முற்றத்தின் எதிரே 4 பெட்டிகளின் பொருட்கள் கொண்ட ரயில் தடம் புரண்டது. விசாகப்பட்டினத்தில் நேவல் டாக் யார்ட் கேட் எதிரே ஒரு சரக்கு ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், அதிக எரியக்கூடிய பொருட்களை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு ஆந்திராவின் தங்குத்தூர் மற்றும் சுரரெடிபாலம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் … Read more

ஹெலிகாப்டரில் விசாகப்பட்டினம் புறப்பட்ட ஆந்திர முதல்வர்.!

விஷ வாயு பாதிப்பு ஏற்பட்ட விசாகபட்டினத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பல் கும்பலாக சாலையில் மயங்கி விழுகின்றனர். இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2000 பேர் இந்த விஷ வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த … Read more

ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது.இதனால் நாடே முடங்கியுள்ளது .ஒரு புறம் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் மறுபுறம் ஆந்திராவில் சோகமான நிகழ்வு ஓன்று அரங்கேறியுள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. பாலிமர் இண்டஸ்ட்ரியல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இன்று இந்த தொழிற்சாலையில் திடீரென்று விஷவாயு கசிவு ஏற்பட்டது.இதனால் அந்த தொழிற்சாலை அமைத்துள்ள பகுதிகளில் இருந்த மக்கள் மூச்சுத்திணறி … Read more