#Breaking:கல்விக் கட்டணம் – மாணவர்களை தண்டித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை – வெளியான அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அனுப்புவது அடிப்படை கல்வி உரிமையை மறுப்பதாகும் என்றும்,இது தொடர்பாக புகார் வரும் பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக,அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாணவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்திருப்பதாக பகரி மூலம் பகிரப்பட்டுள்ளது என்றும், … Read more

7.5% இடஒதுக்கீடு: கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

7.5% உள் ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பை தேர்வு செய்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கினார் முதல்வர். மாணவர்களின் பொறியியல் கனவு நிறைவேறும் நாள் இன்று என பி.இ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார். அரசு பள்ளி … Read more

கல்வி கட்டண தொடர்பான வழக்கு 17-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  கடந்த ஏப்ரல் 20-ம் தேதி தமிழக அரசு தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்க பெற்றோர்களை கட்டாயப்படுத்தக்கூடாது  என அரசாணை பிறப்பித்தது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தியது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவணை முறையில் கட்டணம் … Read more