முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் -தினகரன்

ஊரடங்கு நிவாரண நிதி மற்றும் உணவுத்தொகுப்பு முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார் . கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.இதனால் சாமானியர்கள் வேலைக்கு செல்ல முடியமால் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அறிவித்த படி ஊரடங்கு நிவாரண நிதி மற்றும் உணவுத்தொகுப்பு முழுமையாக சென்றடைவதைத் தமிழக … Read more

அமமுகவை தடை செய்யகோரிய வழக்கு – விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன் கட்சியை பதிவு செய்ய தடை கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அமமுகவை பதிவு செய்ய தடை கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே  நடைபெற்றபோது, கட்சி பதிவுக்காக புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கிவிட்டு பதிவு குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும் அமமுக-வை … Read more

அமமுகவை கட்சியாக பதிவு செய்யக்கூடாது – தடைகோரி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு

அமமுக பொதுச்செயலாளர் தினகரன்  மற்றும் அக்கட்சியின் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி  இடையே நீண்ட நாட்களாக வார்த்தை நடைபெற்று வந்தது.இறுதியாக கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி நீக்கிவிட்டு கர்நாடக மாநிலத்தின் புதிய செயலாளராக சம்பத் அவர்களை நியமனம் செய்தார். இந்த நிலையில் அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அவரது வழக்கில்,அமமுகவை கட்சியாக பதிவு செய்ய 14 பேர் சார்பில் பதிவு விண்ணப்பத்துடன் சேர்த்து … Read more

மீண்டும் பின்வாங்கிய தினகரன் !நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை-தினகரன் அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இதன் பின்  தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய  நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.மேலும் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடவிடவில்லை என்று  தினகரன் தெரிவித்தார்.நிலையான சின்னம் கிடைத்த … Read more

இவர்கள்தான் இந்த வேலையை செய்தார்கள்-அமமுக ஐ.டி.விங் குழுவால் வேதனைப்படும் புகழேந்தி

என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்துள்ளார்கள் என்று வீடியோ குறித்து புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார். அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.கோவையில் அவரது கட்சினருடன் பேசிய வீடியோவில் ,கட்சியில் யாரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியமில்லை.முகவரி இல்லாத தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்றும் பல போராட்டங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தது நான் தான் என்றும் தெரிவித்தார்.இவரது இந்த பேச்சு … Read more