வெளியானது ஆடியோ…! டிடிவி தினகரன் – தங்க தமிழ்செல்வன் இடையேயான மோதல் அம்பலம்!

அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்செல்வன்.  டிடிவி தினகரனுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த இவர் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் டிடிவி தினகரன் உதவியாளருடன் பேசும் ஆடியோ ஆனது வெளியாகியுள்ளது. வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். டிடிவி தினகரன் … Read more

அவசர அவசரமாக காவிரி டெல்டா வயல்களில் எரிவாயு குழாய்கள்! டிடிவி. தினகரன் கண்டனம்!

காவிரி டெல்டா விவசாய பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு எடுப்பதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தி அவசர அவசரமாக அதற்காக குழாய் பாதிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை குறித்து அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் கூறுகையில், ‘ காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருவது கண்டனத்திற்கு உரியது.’ என குறிப்பிட்டார். மேலும், ‘விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அவசர அவசரமாக எரிவாயு … Read more

எங்கள் உடலில் ஓடுவது திமுக எதிர்ப்பு ரத்தம்-தினகரன்

அமமுகவும், திமுகவும் கூட்டு என பொய் பரப்புரை செய்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், எங்கள் உடலில் ஓடுவது திமுக எதிர்ப்பு ரத்தம் ஆகும்.ஜெயலலிதாவின் தொண்டர்கள் திமுகவுடன் சமரசம் செய்யமாட்டார்கள். அமமுகவும், திமுகவும் கூட்டு என பொய் பரப்புரை செய்கிறார்கள். 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சியை நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

3 எம்எல்ஏக்கள் விவகாரம் : தகுதிநீக்கம் செய்ய நினைப்பது அதிமுகவின் பயத்தை காட்டுகிறது-தங்க தமிழ்ச்செல்வன்

அவசரமாக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய நினைப்பது அதிமுகவின் பயத்தை காட்டுகிறது என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.  அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஐயப்ப பக்தர்கள் காவிவேட்டி கட்டுவார்கள். ஆனால் ஓபிஎஸ் காவி வேட்டி கட்டியது மோடி சாமிக்காகவே .அவசரமாக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் … Read more

அமமுக அலுவலகத்தில் விடியவிடிய நடந்திய வருமான வரிச்சோதனை! ரூ.1.50 கோடி சிக்கியது

அமமுக ஒன்றிய அலுவலகத்தில் விடியவிடிய நடைபெற்ற  சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது. ஆண்டிபட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் விடியவிடிய சோதனை நடைபெற்றது.  இன்று காலை 5 மணி அளவில் முடிந்து. நடந்திய வருமான வரிச்சோதனையில் 94 சிறு பாக்கெட்டு களில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு பாக்கெட்டிலும் வாக்காளரின் பெயர் மற்றும் 300 ரூபாய் பணம் என எழுதப்பட்டிருந்தது. சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது.அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தற்காக அமமுக மாவட்ட … Read more

பாமகவிற்கு தொடரும் பின்னடைவு !பாமகவில் இருந்து விலகிய மாநில துணைத்தலைவர் அமமுகவில் இணைந்தார்!

பாமகவில் இருந்து விலகிய மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில்  பா.ஜ.க- பா.ம.க.-தே.மு.தி.க- த.மா.கா- புதிய தமிழகம் – புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றது.மேலும் இந்த கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மக்களவை தேர்தலில் அதிமுக … Read more

அதிமுகவுடன் தினகரன் இணையும் காலம் வரும்!மீண்டும் சர்சையை கிளப்பிய மதுரை ஆதினம்!

தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் எச்சரித்துள்ளார்.  ஜெயலலிதா மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் பல மாற்றங்கள் நடந்துள்ளது. முதலில் பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணி மீண்டும் எடப்பாடி அணியுடன் இணைந்தது.அதே வேளையில்  சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறந்த தண்டனை அனுபவித்து வருகிறார். பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி … Read more

மே 23ஆம் தேதிக்கு பின் பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளியிடுவேன்- தினகரன்

மே 23ஆம் தேதிக்கு பின் பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளியிடுவேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் … Read more

ரூ.20 டோக்கன் தந்த அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு தகவல்

ரூ.20 டோக்கன் தந்த அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு பொருத்தமானது  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.  அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் தினகரன் கட்சி பதிவு செய்யப்படாத கட்சி,இதனால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது திட்டவட்டமாக தெரிவித்தது.இதன் பின்னர் நடைபெற்ற  விசாரணையில் உச்ச நீதிமன்ற … Read more

தினகரனை கைவிட்ட குக்கர்!தினகரனுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.  அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.அதில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று வாதிட்டது … Read more