தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 461 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 97 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 537 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகம் முழுவதும்  5,339 பேர் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டீ கடை முதல் டாஸ்மாக் வரை ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை, உரிய காற்றோட்ட வசதியுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு … Read more

#Breaking:தமிழகத்தில் இ-பாஸ்/இ-பதிவு ரத்து முதல் பொது போக்குவரத்து அனுமதி வரை முழு விவரம்

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம், அத்தியாவசியத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 15,684 பேர் பாதிப்பு;94 உயிரிழப்பு-உச்சத்தில் இருக்கும் சென்னை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,97,682 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,250 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று மேலும் 94 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை … Read more

#BigBreaking:தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா 80 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,66,329 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது. ஆயினும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 12 வயதிற்குட்பட்ட 557 சிறார்களுக்கு … Read more

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு ;இன்று தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகிறது.நேற்று மட்டும் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அதிகரித்து வரும் கொரோனவை கட்டுப்பாடுகளை அதிகரிக்க தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா பரவல் கடந்த ஆண்டை … Read more

தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 5,519 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,91,571 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 6,006 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,35,422 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,231 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6,185 பேர் கொரோனாவிலிருந்து டிஸ்சார்ஜ்.!

கொரோனாவில் இருந்து இன்று 6,185 பேர் குணமடைந்துள்ளார்கள். தமிழகத்தில் இன்று புதிதாக 5,528 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து இன்று 6,185 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,29,416 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கொரோனாவால் இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,154 ஆக … Read more

திருப்பூரில் இரோடு இரவாக மதுக்கடைகளுக்கு வெல்டிங் வைப்பு !

திருப்பூர் காங்கேயத்தில் மதுக்கடைகளை மூடி வெல்டிங் வைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது. மதுபானங்களை வாங்க வருபவர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற கட்டுபாடுகளை உயர்நீதிமன்றம் விதித்தது.  மக்கள் நீதி மையம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க நேற்று பிறப்பித்த உத்தரவு முழுமையாக பின்பற்றவில்லை என்றும் தனிநபர் இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளனர். … Read more

தமிழகத்தில் டாஸ்மாக் மூட காரணம் என்ன ?

தமிழகத்தில் டாஸ்மாக் மூட காரணம் என்ன ? இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது. மதுபானங்களை வாங்க வருபவர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற கட்டுபாடுகளை உயர்நீதிமன்றம் விதித்தது. இதற்கு தி.மு.க தலைவர் … Read more