மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவர்! திருமாவளவன், செல்வப்பெருந்தகை கூட்டாக பேட்டி

Selvaperunthagai – Thirumavalavan: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அண்மையில் தேர்வான செல்வபெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின், தோழமை கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து செல்வப்பெருந்தகை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் அவரின் திருமாவளவனுடனான சந்திப்பு நடைபெற்றது. விசிக தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் திருமாவளவனும், செல்வப்பெருந்தகையும் சந்தித்தனர். இதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசும் போது, … Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.செல்வப்பெருந்தகையை நியமித்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரியாதைக்குரிய காங்கிரஸ் தலைவர் அவர்கள், செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமித்துள்ளார். தலைமை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படும் கே.எஸ் அழகிரி இதுவரை அளித்த பங்களிப்புக்கு பாராட்டுகள். இதனுடன், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை … Read more

இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரி ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து,அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,தங்கம் தென்னரசு ஆகியோரும் நேரில் சென்று வலியுறுத்தியிருந்தனர்.ஆனால், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இதனால்,கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினருக்கும்  ஆளுநரின் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி … Read more

“வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு…முதல்வருக்கு நன்றி” – கே.ஸ்.அழகிரி பாராட்டு!

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கிற்கு இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பாக சிலை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும்,தமிழக முதல்வருக்கு நன்றி என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த,”கர்னல் ஜான் பென்னிகுயிக்” அவர்களின் புதிய சிலையை,அவர்கள் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக … Read more

சத்தியமூர்த்தி பவனில் இன்று ‘ராட்சத பலூன்’ பறக்க விடும் – கே.எஸ்.அழகிரி.

சென்னை:சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று ராட்சத பலூன் பறக்க விடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு,இன்று காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ராட்சத பலூன் பறக்க விடுகிறார். இதுகுறித்து வெளியான அறிக்கையில்,”அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் 75-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் … Read more