புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை சந்தித்தது ஏன்?- நாராயணசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பதிவிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து புதுச்சேரி வந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆளுநராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜனை முதல்வர் நாராயணசாமி … Read more

தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்?- கேஎஸ் அழகிரி

புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, புதுச்சேரி அரசை சிதைக்கவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நாராயணசாமியை செயல்படவிடாமல் தடுக்க கிரண் பேடியை அனுப்பியது போல் தற்போது தமிழிசை அனுப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் கிரண் பேடியை பதவி நீக்கம் செய்ய என்ன காரணம்? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். இதனிடையே, … Read more

புதுச்சேரி வந்தடைந்த தமிழிசை சௌந்தரராஜன்..!

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண்பேடி நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி … Read more

#BREAKING : கிரண்பேடி நீக்கம் ..! ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனுக்கு கூடுதல் பொறுப்பு ..!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம். அரசின்  நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என பல்வேறு புகார்களை கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், தற்போது துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால், கூடுதல் பொறுப்பாக துணை … Read more

ரஜினிகாந்துக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் – தமிழிசை சவுந்தரராஜன்

எனக்கு சுருட்டை முடி தான். ஆனால் யார் பணத்தையும் சுருட்டியது அல்ல என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 16 வயதினிலே ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் போல என விளையாட்டுக்கு சொல்லுவேன். என்னை எப்போதுமே பரட்டை முடியுடன் தான் மீம்ஸ் போடுவார்கள். சுருட்டை முடியுடன் பிறப்பது அவ்வளவு பெரிய தப்பா என ஜாலியாக தெரிவித்துள்ளார். நான் … Read more

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் இரங்கல்.!

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். தற்போது இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது முகநூல் பக்கத்தில், தஞ்சை தரணியின் மண்ணின் மைந்தராக சட்டமன்றத்தில் … Read more

அன்பின் சகாப்தம் – கேப்டன் விஜயகாந்துக்கு தெலுங்கானா ஆளுநர் வாழ்த்து.!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். இன்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளையொட்டி பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் செய்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வானத்தை போல பரந்த மனசு இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையும் பெற்று புலன் விசாரணை செய்தலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தமாக கேப்டனாக மரியாதையுடன் … Read more

மருத்துவர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது -தெலுங்கானா ஆளுநர் தமிழிசை

மருத்துவர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கின்றது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை கீழ்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய ஊழியர்கள் முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் மருத்துவரின் உடல் வேறு இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது … Read more

தலைவராக நான் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஜெயல‌லிதா கடிதம் அனுப்பினார்- தமிழிசை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார்.  தலைவராக நான் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா வாழ்த்து கடிதம் அனுப்பினார் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  தெலுங்கானாவின் ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை நியமனம் செய்யப்பட்டார்.கடந்த 8-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை.ஆனால் இதன் பின்னரும் அவரது சொந்த மாநிலமான தமிழகத்துக்கு வந்து வந்து செல்கிறார். இந்நிலையில் கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் … Read more

தெலங்கானா ஆளுநராக தமிழிசை பதவியேற்பு ..!

தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார். தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி பிராமண நிகழ்வு தெலுங்கானா ஹைதிராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா அமைச்சர்கள், தமிழக அமைச்சர்களான ஜெயக்குமார், வேலுமணி தங்கமணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். … Read more