அன்பின் சகாப்தம் – கேப்டன் விஜயகாந்துக்கு தெலுங்கானா ஆளுநர் வாழ்த்து.!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

இன்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளையொட்டி பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் செய்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வானத்தை போல பரந்த மனசு இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையும் பெற்று புலன் விசாரணை செய்தலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தமாக கேப்டனாக மரியாதையுடன் நெறஞ்ச மனசுதான் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்