39 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என்பதால் இளைஞர் தற்கொலை!

ஹைதராபாத் மாநிலத்தில் 39 வயதாகியும் தனக்கு திருமணம் நடக்கவில்லை எனும் விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஸ்ரீகாந்த் சாரி என்பவர் பொற்கொல்லராக பணியாற்றி வந்துள்ளார். சாரி தான் வேலை பார்க்கக்கூடிய இடத்துக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சற்று மயக்கமுற்ற நிலையில் ஸ்ரீகாந்த் சாரி வீட்டிற்கு வந்துள்ளார். எனவே அவரது வீட்டின் உரிமையாளர் அவருக்கு உதவி வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். … Read more

எதிரிகள் சுற்றி வளைத்ததால் தற்கொலை செய்து கொண்ட போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பு தலைவன்!

போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபுபக்கர் ஷேக்கை இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் பயங்கரவாதிகள் சுற்றி வளைத்துள்ளனர். எதிரிகள் சுற்றி வளைத்ததால் தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்ட போகோ ஹராம் பயங்கரவாதத்தின் அமைப்பின் தலைவன் வடக்கு மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவினை சுற்றியுள்ள உள்ள லிபியா, சூடான், சாத் கமரூன் ஆகிய நாடுகளில் போகோ ஹராம், ஐ.எஸ், அல்கொய்தா போன்ற சில பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்காவின் மிகவும் … Read more

ஒன்றரை வயது மகன் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட 38 வயது நபர்!

ஊரடங்கு நேரத்தில் வேலையில்லாமல் வறுமையில் இருந்ததால், 38 வயது நபர் தனது மகன் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஒருபுறம் கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தாலும் மக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும்கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு … Read more

உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!

மதுரை உசிலம்பட்டி அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே நாகப்பட்டறை ஒன்று வைத்து நடத்தி வருபவர் தான் சரவணன். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மனைவியுடனும் தனது மூன்று பிள்ளைகளுடனும் நாகப்பட்டறையில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்துள்ளார் சரவணன். இந்நிலையில் சில மாதங்களாக சரவணனுக்கு கடன் பிரச்சினை அதிகம் ஏற்பட்டுள்ளது. கடன் … Read more

தங்கள் மூலம் தங்கள் பேரனுக்கு கொரோனா பரவி விடக் கூடாது என்பதற்காக தற்கொலை செய்துகொண்ட தம்பதிகள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள முதிர்ந்த தம்பதிகள் இருவர் தங்கள் மூலமாக தங்கள் பேரனுக்கு கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காக ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து கொண்டே செல்வதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டு இருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மூலமாக தங்கள் குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற … Read more

கொரோனா பாதித்த மனைவியைக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட கணவர்!

மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மனைவியை கொன்று விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பாட்னாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவை ஒழிப்பதற்காக மத்திய அரசாங்கம் எவ்வளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மேலும், பலர் கொரோனாவுடன் … Read more

டெல்லி:ஹோட்டல் அறையில்  பிணமாய் தொங்கிய காதல் ஜோடி-கிடைத்த ஆதாரம்..!

டெல்லி: ஒரு ஹோட்டல் அறையில்  தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி. டெல்லியின் நபி கரீம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் செவ்வாய்க்கிழமையன்று 30 வயது இளைஞரும் அவரது காதலியும் மின் விசிறியில்  தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டனர். டெல்லியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியின் அறைக்குள் ஒரு காதல் ஜோடி மின் விசிறியில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த அறையிலிருந்து ஒரு கடிதத்தை கண்டுபிடித்தனர். அதில்,அவர்கள் … Read more

இதுதான் என் கடைசி பதிவு என போஸ்ட் செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட டிக் டாக் பிரபலம்!

அமெரிக்காவை சேர்ந்த டிக்டாக் பிரபலமாகிய தாஜாரியா என்ற 18 வயது பெண்மணி இதுதான் எனது கடைசி போஸ்ட் என இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன்பின் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். டீ என அழைக்கப்படும் பிரபலமான அமெரிக்காவின் டிக் டாக் நட்சத்திரம் தான் தாஜாரியா குயின்ஸ் நோயர். இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பதிவிடும் இவர் டிக் டாக் செயலி மூலமாக … Read more

இளைஞரின் கண்ணைக்கட்டி காட்டில் வைத்து தாக்கிய கும்பல் கைது!

திருடி விட்டதாக கூறி இளைஞரின் கண்ணை கட்டி வைத்து காட்டில் பிரம்பால் அடித்து தாக்கிய கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்கா பூண்டி மேல தெருவில் வசித்து வரக்கூடிய குணசேகரன் என்பவனின் மகன் தான் ராகுல். கூலித்தொழில் செய்து வரக்கூடிய ராகுல் திருடி விட்டதாக கூறி அந்த ஊரில் இருக்ககூடிய சில  இளைஞர்கள் சேர்ந்து ராகுலின் கண்ணை கட்டி வைத்து அருகே உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று மரத்தில் பிடித்து வைத்துக்கொண்டு … Read more

காத்திருந்து லாரியின் சக்கரத்துக்கு முன்பாக விழுந்து தற்கொலை செய்து கொண்ட நபர்!

நீண்ட நேரமாக காத்திருந்து லாரியின் முன்பதாக விழுந்து தற்கொலை செய்துகொண்ட நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் பார்ப்போரை பதைபதைக்க செய்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் அடையாளம் தெரியாத ஒருவர் கடந்த 2ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு அவரது தலை முழுவதுமாக சிதைந்த நிலையில் இருந்ததால் பாதிக்கப்பட்டவர் யார் என்பது குறித்து … Read more