விடாத பாசிச பாசம்..!!பாய்கிறதா..?வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்..!தமிழக பிஜேபி தலைவர் தமிழிசையின் மீது..!!

ஆராய்ச்சி மாணவி சோபியாவின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பேசிய தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய பட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடிக்கு விமானத்திற்கு சென்றார். அவர் சென்ற விமானத்தில் பயணித்த சக பயணியான … Read more

மாணவி சோபியா கைது..! செய்யப்பட்டதற்கு திருமுருகன் காந்தி கண்டனம்..!!அவதூறாக பேசிய பாஜகவினர் மீதுஏன்..?வழக்குப்பதியவில்லை..!

மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு திருமுருகன் காந்தி இது குறித்து பேசியதாவது  பாஜகவை விமர்சனம் செய்யப்பட்டதாக மாணவி சோபியாவை கைது செய்தது கண்டிக்கத்தக்கதுஎன்றும் மேலும்அவதூறாக பேசிய பாஜகவினர் மீது ஏன் வழக்குப்பதியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மீது 34 வழக்குகள் போடப்பட்டுள்ளது.இதில் அவர் மீது தேச போடப்பட்ட துரோக வழக்கும் அடங்கும்.இவரும் தனது கருத்துகளை அரசுக்கு எதிராக … Read more

சுதந்திரப்பறவை சோபியா பெயிலில்..! அரசியல்வாதிகள் ஏன் வெளியில்..!விமர்சிப்பது குற்றமெனில்..! அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே..!கமல்ஹாசன் அதிரடி கருத்து..!!

ஆராய்ச்சி மாணவி சோபிய கைது நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.இந்நிலையில் நடிகரும்,மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் மாணவி சோபியா விவகாரம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே என்று பதிவிட்டுள்ளார்.மேலும் சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதி தான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன் என்று  கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில் … Read more

பாஜவுக்கு எதிராக முழக்கமிட்ட..! சோபியாவின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது..!!ஹெச்.ராஜா கண்டனம்..!

பாஜவுக்கு எதிராக முழக்கமிட்ட சோபியாவின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சோபியா விவகாரம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் பாஜவுக்கு எதிராக முழக்கமிட்ட சோபியாவின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் எல்லா அநாகரீக செயல்களையும் ஆதரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் செயல் கண்டிக்கத்தக்கது ஹெச்.ராஜா பதிவிட்டுள்ளார். ஆராய்ச்சி மாணவி  சோபியா பாசிச பாஜக ஆட்சி ஒழிக..! என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை எதிரே … Read more

கருத்து சுதந்திரம் இருக்கிறது..! என்பதற்காக விமானத்திற்குள் சென்று முழக்கமிடுவதா?அமைச்சர் ஜெயக்குமார்..!!

கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக விமானத்திற்குள் சென்று முழக்கமிடுவதா?என்று அமைச்சர் ஜெயக்குமார் மாணவி சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஜனநாயக ரீதியில் போராடலாம்  போராட்டம் நடத்த உரிமை உண்டு, அனுமதியும் உண்டு இருந்தாலும் எதற்கும் இடம், பொருள், ஏவல் உள்ளது; ஜனநாயகத்தில் இது அனுமதிக்க முடியாத செயல் என்றும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக விமானத்திற்குள் சென்று முழக்கமிடுவதா?என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர் விளம்பரத்திற்காக கோஷமிடுவதை அனுமதித்தால், விமானநிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை … Read more

மாணவி சோபியாவுக்கு ஜாமின்..! வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம்..!!

பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் கைதான மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.மேலும் நாட்டின் மீது அக்கறை இருப்பது அவசியம்தான் என்றும்,பொது இடங்களில் இனி இது போன்று பேசக்கூடாது என மாணவி சோபியாவுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.மாணவி சோபியாவுக்கு அறிவுரை வழங்குமாறு அவருடைய தந்தைக்கு நீதிபதி அறிவுறுத்தினார். நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக அரசை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்பு பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் இதனால்3 பிரிவுகளில் … Read more