தோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – சஞ்சு சாம்சன்…!

இந்த சீசனை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். உதாரணமாக சென்னைக்கு எதிரான போட்டியில் 74 ரன்களும் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 85 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் எழுந்து வருகிறது. பல கிரிக்கெட் வீரர்கள் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி என்று புகழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில் கேப்டன் தோனியை … Read more

சஞ்சு சாம்சனை புகழ்ந்து தள்ளிய கவுதம் கம்பீர்…!

ஐபிஎல் டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதியது இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது . மேலும் இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்மித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ஜெய்ஸ்வால் 6 ரன்னில் வெளியேறினர். பின்னர், இறங்கிய சஞ்சு சாம்சன் , ஸ்மித் உடன் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர். … Read more

இளைஞர்களின் ரோல் மடல் “கிங் கோலி”- சஞ்சு சாம்சன்.!

எங்களை போல் இளம் வீரர்களுக்கு விராட் கோலி தான் ரோல் மாடல் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் அன்மையில் நடந்த ஒரு பேட்டியில் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி … Read more

IPL தொடரால் மக்களின் மனநிலையை மாற்ற முடியும் – சஞ்சு சாம்சன்

கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டு மக்களின் மனநிலையை ஐபிஎல் தொடரால் மாற்றமுடியும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், ஒரு பகுதியாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த பொதுமுடக்கத்தால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக … Read more

பயிற்சியாளரை சரமாரியாக தாக்கிய சாஹல்! இடையில் சிக்கிய ரிஷப் பண்ட்! ‘தர்ம அடி’ வைரல் வீடியோ உள்ளே!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான சாஹல், ரிஷப் பண்ட் ஆகியோர் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பயிற்சியாளரை வேடிக்கையாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான சாஹல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் பயிற்சியாளரை வேடிக்கையாக தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது கிரிக்கெட் வீரர்கள் அப்போது வேறு விளையாட்டுகளில் பயிற்சி எடுப்பது வழக்கம். அந்த வகையில் ரிஷப் பண்ட் குத்து சண்டை பயிற்சியில் … Read more

தவானுக்கு காயம்- இளம் வீரர் இந்திய அணியில் சேர்ப்பு

இந்திய அணி வங்கதேச அணியின் சுற்றுப்பயணத்தை அடுத்ததாக மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் விளையாடவுள்ளது. இந்த தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.முதலாவதாக டி-20 போட்டியில் இரு அணிகளும் விளையாடுகிறது.முதல் டி-20 போட்டி  டிசம்பர் 6 -ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.  இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. டி-20 வீரர்கள் விவரம் … Read more

காட்டடி அடித்த சஞ்சு சம்சன்..!129 பந்தில் 212 ரன்…21 பவுண்டரி..10 சிக்ஸர்…!

நேற்று நடந்த விஷயம் சாரா போட்டியில் கேரளா மற்றும் கோவா அணிகள் மோதியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கேரளா அணி 50 ஓவர் முடிவில் 377 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சஞ்சு சம்சன் 212 , சச்சின் பேபி 127 ரன்கள் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய 378ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கோவா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் கேரளாவில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி … Read more

தளபதியை பாராட்டிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் வைரலாகும் வீடியோ

சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் எனவும் விஜய் நடித்த “சர்கார் “படத்தையும் பற்றி கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.இதில் கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் அவர் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து 2019-ம் ஆண்டு ஐபிஎல்லில்  முதல் சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் … Read more

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் போது 8 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட க்ருனால் பாண்டியா,சஞ்சு சாம்சன் விலை போகாத இங்கிலாந்தின் சாம் பில்லிங்க்ஸ்…!!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு 11-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் மாலை 4மணிக்குமேல் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் கிழே. 1. டெல்லி … Read more