கடலூரில் அதிர்ச்சி சம்பவம் ..!இபிஎஸ் வேதனை…!

கடலூரில்,ஆக்சிஜன் வெண்டிலேட்டரை வேறு ஒரு நோயாளிக்கு பொருத்துவதற்காக அகற்றியதால் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக, பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் வேதனை அளிக்கிறது,என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம்,திட்டக்குடி பகுதியில் வசித்து வந்த ராஜா என்பவர் கொரோனா தொற்று காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதனால்,கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில்,கொரோனா நோயாளி ராஜா காலை உணவு அருந்த சென்றபோது,அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் மற்றும் … Read more

டெல்லியில் ஆக்ஸிஜனை கள்ள சந்தையில் விற்ற கேட் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கைது

சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் விற்பனை செய்யப்பட்டதாக புகார் – போலீஸ் அதிரடி நடவடிக்கை புதுடெல்லியில் கேட் ஆம்புலன்ஸ் மூலம் சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விற்பனை செய்த 2 பேரை தென் டெல்லி போலீசார் திங்கள்கிழமை (மே 10) இன்று  கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகர் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் விற்பனை செய்யப்பட்டதாக புகார் வந்தது, அதன்பிறகு காவல்துறையினர் விசாரித்தில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரான பவன் மற்றும் அவரது கூட்டாளர் இருவரும் அவர்கள் பணிபுரிந்த … Read more

இதயத்தை நொறுக்கும் புகைப்படம்..! உயிரைக் காப்பாற்ற கணவனின் வாயில் காற்றை ஊதும் பெண்..!

ஆக்ரா:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது கணவனைக் காப்பாற்றுவதற்காக பெண் ஒருவர்,கணவனின் வாயில் காற்றை ஊதியப் புகைப்படம் காண்போரை மனம் உடைய செய்கிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறக்கின்றனர். இந்த நிலையில்,உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் வசிக்கும் ரேணு சிங்கால் என்ற பெண்,தனது கணவர் ரவி சிங்காலுக்கு (47) கொரோனா தொற்றின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதனால் அருகில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவமனைக்கு … Read more

தொடரும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை.. பிரதமருக்கு டெல்லி முதல்வர் கடிதம்!

டெல்லியில் உடனடியாக ஆக்சிகன் வசதியும், படுக்கை வசதியை செய்துதருமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 24,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதாக அம்மாநில முதல்வர் கூறினார். மேலும், டெல்லியில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். … Read more

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்த நடிகர் சோனு சூட்…!

பாலிவுட் நடிகர் சோனு சூட் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு,கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.அதுமட்டுமல்லாமல்,ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது,விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்தது என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகர் சோனு சூட். நாடு முழுவதும் கொரோனா … Read more

ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு: ஒரே நாளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், நலசோப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனாவால், நாள் ஒன்றுக்கு 63,000- மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக அம்மாநிலத்தில் இரவு ஊரடங்கு, உட்பட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள நலசோப்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா … Read more

கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு.! 3 பேர் உயிரிழப்பு.! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் விநியோக தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள், 70 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவார். இவர்கள் உயிரிழப்புக்கு காரணம் குறிப்பிட்ட கொரோனா வார்டில் ஆக்சிஜன் … Read more