ஓபிஎஸ்-க்கு விதித்த தடை செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

o panneerselvam

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அதிமுக பொதுச்செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு செயல்படுவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என இபிஎஸ் மனு தாக்கல் செய்திருந்தார். எடப்பாடி பழனிசாமி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு … Read more

ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!

o panneerselvam

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தனி நீதிபதி தடை விதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக … Read more

“தமிழ்நாட்டில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும்” – ஓபிஎஸ்

o panneerselvam

உரிமை மீட்பு குழு சார்பாக காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் மற்றும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், கூட்டணி தொடர்பான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறீர்கள், இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், தமிழ்நாட்டில் பாஜக … Read more

இபிஎஸ் குறித்த ரகசியம்… டிடிவி தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தல்… ஓபிஎஸ் பேட்டி!

o panneerselvam

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவு தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன்பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. பதவி கொடுத்த சசிகலாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்தவர் தான் அவர். சசிகலாவை தரக்குறைவாக பேசி இபிஎஸ் நம்பிக்கை … Read more

பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 வழங்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

O Panneerselvam - pongal parisu

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டு இருக்கிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை … Read more

New Year 2024: ஆங்கில புத்தாண்டுக்கு தலைவர்கள் வாழ்த்து மழை.!

Edappadi - stalin

ஒவ்வொரு புத்தாண்டிற்கும் நண்பர்களுடன் வெளியில் செல்வது, சொந்த ஊர்களுக்கு செல்வது, வெளியூருக்கு செல்வது, கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். பல சாதனைகள் மற்றும் சோதனைகளை கடந்து, இன்றுடன் 2023ஆம் ஆண்டு நிறைவடைய உள்ளது. நாளை உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் இந்த 2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் … Read more

எல்லோரிடமும் அன்பாக பழக கூடியவர் கேப்டன் விஜயகாந்த்- ஓ.பன்னீர்செல்வம்..!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர்,செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக சிறப்பாக பணியாற்றியவர், அனைத்து மக்களிடம் அன்பாக பழகி பழகக் கூடியவர், ஏழை எளிய மக்கள் … Read more

‘தேச பக்தியும், தெய்வ பக்தியும் கொண்டவர்’- விஜயகாந்த் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!

vijayakanth - O. Panneerselvam

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் … Read more

என்ன ரகசியம் தெரியுமோ சொல்லுயா… ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்.! 

Edappadi Palaniswami - O Panneerselvam

நேற்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், நான் சில விஷயங்களை வெளிபடையாக கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறை சென்று விடுவார். கட்சிக்கு நான் உண்மையானாக இருந்ததன் காரணமாகவே ஜெயலலிதா … Read more

நான் சில விஷயங்களை கூறினால் இபிஎஸ் திகார் சிறை செல்வார் .! ஓபிஎஸ் அதிரடி…

Edappadi Palaniswami - O Panneerselvam

இன்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சி விவகாரங்கள் குறித்து பல்வேறு விவகாரங்களை கூறினார். அவர் பேசுகையில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் என்னை மிகவும் நம்பினர். அவர்கள் நம்பியதால் தான் சாதாரண தொண்டனாக இருந்து, நகர மன்ற தலைவராக மாறி, பின்னர் சட்டமன்ற தலைவராகவும், அமைச்சராகவும் முதல்வராகவும் நான் பொறுப்பில் இருந்தேன். … Read more