பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கதர் மற்றும் கிராமப் பொருட்கள் சிறப்பு விற்பனை..!!

நெல்லையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் சிறப்பு விற்பனையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். பொதுமக்களும் இப்பொருள்களை ஆர்வமுடன் வந்து வாங்கி செல்கின்றனர்..இதுபோன்ற புதுமையான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு…!!

நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் கீழ்ப்பாவூர் பகுதியில், மு.க ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய தோல்வியை  மு.கருணாநதியின் மூத்த மகனும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மு.க.அழகிரி மற்றும் அவரது பேரனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக மதுரை,நெல்லை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி  4 மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!

கார்டூனிஸ்ட் பாலா வான்டடு லிஸ்டில்

சமிபத்தில் நெல்லையில் கந்துவட்டிக்கு எதிராக தீக்குளித்து இறந்த குடும்பத்தினருக்கு நிகழ்ந்த அநிதியை கண்டு கோபப்பட்டு கார்டூனிஸ்ட் பாலா ஒரு கேலிசித்திரம்  வரைந்தார்.கார்டூனிஸ்ட் பாலா வரைந்த சித்திரம் அவதூறு செய்வது போல அமைந்தாக கூறி மாவட்ட ஆட்சியர் நந்தூரி அளித்த புகார் கொடுத்ததை அடுத்து, பாலாவை கைது செய்தனர் இதையடுத்து, சென்னையில் கார்டூனிஸ்ட் பாலாவை கைது செய்த போலீசார், நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது பாலா தரப்பில் ஜாமின் … Read more