முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி காயமடைந்த பெண் உயிரிழப்பு!

சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சென்னை சென்று கொண்டிருந்த முதல்வர் அவர்களின் பாதுகாப்பு வாகனம் கடந்த 18 ஆம் தேதி அவ்வழியே சென்று கொண்டிருந்த சௌந்தரம் என்னும் 64 வயது பெண் மீது மோதியுள்ளது. இதனால் அந்தப் பெண் படுகாயம் அடைந்துள்ளார். காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புதிதாக துவங்கப்படும் 8 நிறுவனங்களுக்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர்!

தமிழகத்தில் புதிதாக துவங்கப்படவுள்ள நிறுவனத்திற்கு காணொளி காட்சி மூலம் பந்தக்கால் நட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கொரோனாவால் உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்க கூடிய சூழ்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக வெளியில் நடமாட கூடாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் பொருட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. அவ்வாறு போடப்பட்ட ஒப்பந்தங்களில் தற்பொழுது 8 புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் … Read more

“ரஜினி கட்சி ஆரம்பித்தால் 10 நாட்களில் அவர்தான் முதல்வர்”- எஸ்.வி.சேகர்!

நடிகர் ரஜினி கட்சி ஆரமித்தால் 10 நாட்களில் அவர்தான் முதல்வர் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். ஆனால் தற்பொழுது வரை அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. சமீபத்தில் ரஜினி கூறுகையில், மக்களிடையே எப்பொழுது எழுச்சி ஏற்படுகிறதோ, அப்பொழுது நான் கட்சி தொடங்குவேன் என கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன், ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என தெரிவித்தார். … Read more

அதிரடியாக அவசர கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி – பி.ஆர்.பாண்டியன்….

காவிரி டெல்டாவில்  அறுவடைசெய்யப்பட்ட  நெல்லைக் கொள்முதல் செய்ய உடனடியாக உத்தரவிட்ட தமிழக முதல்வருக்குத் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன்  நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கூறியிருப்பதாவது, ”காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி சுமார் 1.25 லட்சம் ஏக்கரில் நடவு  செய்யப்பட்டு இருந்தது.  தற்போது மே முதல் வாரம் தொடங்கி அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால் இன்னமும்  நேரடி நிலையங்கள் திறக்கப்படாததால் அந்த அறுவடைப் பணிகள்  நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் நேரிலும், … Read more

போட்டியின்றி தேர்வான உத்தவ் தாக்ரே இன்று சட்டமேலவை உறுப்பினராக பதவியேற்பு…

மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அம்மாநில முதலமைச்சராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே, 6 மாதங்களுக்குள் சட்டமன்ற தேர்தல் அல்லது மேலவை உறுப்பினராக தேர்வானால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடாமல் இருந்தது வந்தது. இந்நிலையில், வரும் மே 21 -ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் … Read more

எங்கள் அப்பாவை பழைய இடத்துக்கே மாற்றுங்கள் CM ஐயா- கதறும் அரசு மருத்துவர்களின் குழந்தைகள்!

உலகம் முழுவதும் தற்போது லட்சக்கணக்கானோர் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையிலும் தன்னலம் பாராது மருத்துவர்கள் காவலர்கள் ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை பிரிந்து 400 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தொலைவில் இருந்து வேலை செய்து வருகின்றனர். இது குறித்து அண்மையில் பேசிய மருத்துவர்கள் … Read more

கொரோனா குறித்து முதல்வர் மீண்டும் ஆலோசனை கூட்டம்.!

கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . கொரோனா முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே  தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் … Read more

3 ஆண்டுகள் நிறைவு – யோகி ஆதித்யநாத் சாதனை.!

கடந்த 2017ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 403 இடங்களில் 312 இடங்களை பிடித்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. யோகி ஆதித்யநாத் 2017, மார்ச் 19ல் உத்தரபிரதேசத்தின் 21வது முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் யோகி பொறுப்பேற்ற ஓராண்டில் நடந்த இடைத்தேர்தலில், பாஜக கைவசம் இருந்த 3 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. பின்னர் தோல்வியிலிருந்து பாடம் கற்று கொண்டதாக யோகி தெரிவித்தார். இதையடுத்து கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில், 62 தொகுதிகளை பாஜக … Read more

சீமான் மீது குற்றச்சாட்டு பதிவு.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில் தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக செய்தி வெளியானது. சீமான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிபதி வழக்கை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில் தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்து பேசியதாக செய்தி வெளியானது. சீமானின் இந்த கருத்தும், செய்தியும் தமிழக … Read more

தமிழகம் 10 துறைகளில் முதலிடம்.! முதல்வர் பெருவிதம்.!

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகம் 10 துறைகளில் முதலிடத்தில் உள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தொழில் துறையை ஊக்குவிக்க பச்சை … Read more