நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி!
நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி 8 வயதாகும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13- ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3,843 மையங்களில் நீட் தேர்வுகள் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான ஹால் டிக்கெட் மாணவர்களுக்கு … Read more