திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வாக்களித்தார்…!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார் திமுக வேட்பாளர் மருதுகணேஷ். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது தான் திமுகவின் கோரிக்கை எனவும்,அதேபோல் ரூ.6,000 அல்ல ரூ.60,000 கொடுத்தாலுமே ஆர்.கே.நகர் மக்கள் ஏமாறமாட்டார்கள் எனவும் வாக்களித்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். source : dinasuvadu.com

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனுதாக்கல் செய்தார்.

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஆர்கே நகர் தொகுதியில் இடைதேர்தல் அறிவிப்பு வெளியானது, பின்னர் அங்கு அதிமுக 2 அணிகள், திமுக என கடும் போட்டி நிலவியது பின்னர் பணபட்டுவாடா அதிகமானதால், அந்த தேர்தல் ரத்தானது. பின்னர் தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகி திமுக, அதிமுக, தினகரன் என போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை தற்போது தாக்கல் செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் சேகர்பாபு, சுதர்சனம் … Read more

ஆர்.கே. நகர் இடைதேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்

ஆர்.கே நகர் இடைதேர்தலில் திமுக சார்பில் மருதுகனேஷ் போட்டியிடுவார் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. திமுக சார்பில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மருதுகனேசை நிற்க வைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன் பிறகு மருதுகணேஷ் ஆர்.கே நகர் இடைதேர்தல் வேட்பாளர்களாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.