திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனுதாக்கல் செய்தார்.

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் ஆர்கே நகர் தொகுதியில் இடைதேர்தல் அறிவிப்பு வெளியானது, பின்னர் அங்கு அதிமுக 2 அணிகள், திமுக என கடும் போட்டி நிலவியது பின்னர் பணபட்டுவாடா அதிகமானதால், அந்த தேர்தல் ரத்தானது. பின்னர் தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகி திமுக, அதிமுக, தினகரன் என போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை தற்போது தாக்கல் செய்தார். உடன் திமுக நிர்வாகிகள் சேகர்பாபு, சுதர்சனம் இருந்தனர். இதனை தொடர்ந்து TTV.தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர் இன்று வேட்புமனுதாக்கல் செய்ய  உள்ளதால் இந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Comment