பயணிகள் கவனத்திற்கு.. மெட்ரோ ரயில் ஸ்பெஷல் அறிவிப்பு..!

சென்னையில் நடைபெற உள்ள மாரத்தானை முன்னிட்டு நாளை(ஜனவரி 6) அதிகாலை 3 மணி முதல் 5 மணிவரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற 06.01.2024 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இதனையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், சென்னை மெட்ரோ … Read more

21 கிமீ மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 129 வது மெய்நிகர் திரை மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து அப்போட்டியில் பங்கேற்றார். அதிகாலை 4.30 மணியளவில் தனது இல்லத்தில் இருந்து போட்டியில் பங்கேற்ற அமைச்சர் 21 கிமீ தொலைவுக்கு நீண்ட மாரத்தானை,மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி நினைவு இடத்தில் நிறைவு செய்தார்.இந்த போட்டியில் அவருடன் காவல்துறையினர்,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: “கொரோனா பெருந்தொற்று பிறகு 10 நாட்கள் … Read more

10 கி.மீட்டரை வெறும் 62 நிமிடங்களில் ஓடிய 5 மாத கர்ப்பிணி பெண்..!

பெங்களூருவில் டி.சி.எஸ் 10 கே மராத்தான் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த  மராத்தான் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெற்றது, இருப்பினும் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக, இது டிசம்பரில் மாதம் நடைபெற்றது. இந்த மராத்தானில் பங்கேற்க ஏராளமானோர் வந்தனர். இந்த மாரத்தான் போட்டியில் ஒரு அதிசயம் ஓன்று நிகழ்ந்தது. அது என்னெவென்றால் அங்கிதா கவுர் என்ற ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஓருவர் வெறும் 62 … Read more

சிவகாசியில் மினி மாரத்தான்…..மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு..!!

உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் சிவகாசி  பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.இந்த மாரத்தான் போட்டியானது  சிவகாசி முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் தொடங்கி சிவகாசி  நகரின் பிரதான வீதிகளின் வழியே சென்று  JCI மேல்நிலைப்பள்ளி மைதானத்தை வந்தடைந்தது.இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவர் பிரிவில் கோயம்புத்தூரை சேர்ந்த கோகுல் என்ற மாணவனும் , மாணவியர் பிரிவில் சந்தியா என்ற மாணவியும்  முதலிடத்தை பிடித்தனர். இதைப்போல் கல்லூரி மாணவர்களின் பிரிவில் திருநெல்வேலி மாவட்டத்தை  சேர்ந்த அஜித்குமாரும், மாணவியர் பிரிவில் … Read more