சிவகாசியில் மினி மாரத்தான்…..மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு..!!

உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் சிவகாசி  பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.இந்த மாரத்தான் போட்டியானது  சிவகாசி முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் தொடங்கி சிவகாசி  நகரின் பிரதான வீதிகளின் வழியே சென்று  JCI மேல்நிலைப்பள்ளி மைதானத்தை வந்தடைந்தது.இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி மாணவர் பிரிவில் கோயம்புத்தூரை சேர்ந்த கோகுல் என்ற மாணவனும் , மாணவியர் பிரிவில் சந்தியா என்ற மாணவியும்  முதலிடத்தை பிடித்தனர். இதைப்போல் கல்லூரி மாணவர்களின் பிரிவில் திருநெல்வேலி மாவட்டத்தை  சேர்ந்த அஜித்குமாரும், மாணவியர் பிரிவில் சிவகாசியை சேர்ந்த மாலையம்மாள் என்ற மாணவியும் முதல் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ , மாணவியருக்கு மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் பரிசுகளை வழங்கினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment