கர்ப்பிணி பெண்ணை பாதியில் இறக்கிவிட்டு சென்ற ஆம்புலன்ஸ்!! வைரலாகும் வீடியோ

₹1,000 செலுத்தத் தவறியதால் கர்ப்பிணிப் பெண்ணை உத்திர பிரதேச சாலையில் விட்டுச் சென்ற ஆம்புலன்ஸ்.  உத்திரபிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினரிடம் ஆம்புலன்ஸிற்கு பணம் செலுத்த போதிய பணம் இல்லாததால் ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ப்பிணிப் பெண்ணை சாலையில் விட்டுச் சென்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், கர்ப்பிணிப் பெண் சாலையில் அமர்ந்திருப்பதைக் காணலாம், அவரது குடும்பத்தினர் அவருக்கு உதவ முயற்சிக்கிறார்கள். மேலும் அந்த ஆம்புலன்ஸ் விட்டு செலாவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. குடும்பத்தினர் ₹1,000 செலுத்தத் தவறியதால் … Read more

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிக்கு ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்..!

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி சென்று கொண்டிருந்த ஆட்டோவிலேயே பிரசவம் பார்க்க இரண்டு பெண் காவலர்கள் உதவியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்த காரணத்தால் ஆட்டோ மூலமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோ வெள்ளத்தில் சிக்கியதால் அதன் பின்னர் நகரமுடியாமல் தத்தளித்து கொண்டிருந்துள்ளது. அப்பகுதியில் இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த இரண்டு பெண் காவலர்கள் ஆட்டோவை … Read more

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு உதவ தயக்கம் காட்டிய உறவினர்கள்-உதவிய திருநங்கை

கொரோனா வைரஸ் பாதித்ததால் உறவினர்கள் முன்வந்து உதவாத சூழ்நிலையில் திருநங்கை கலைக்குழுவை சேர்ந்த சமீரா எனும் திருநங்கை கர்ப்பிணிப் பெண்ணிற்கு உதவியுள்ளார்.அந்த பெண்ணிற்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் தற்போது மிக அதிகமாக பரவி வரும் நிலையில் உறவுகள் என்ற நிலையையும் கடந்து பலர் தங்களது சொந்தப் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு கூட உதவ தயக்கம் காட்டுகின்றனர். தங்களுக்கு கொரோனா தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் அருகில் செல்வதற்கு குடும்பத்தினரே … Read more

10 கி.மீட்டரை வெறும் 62 நிமிடங்களில் ஓடிய 5 மாத கர்ப்பிணி பெண்..!

பெங்களூருவில் டி.சி.எஸ் 10 கே மராத்தான் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த  மராத்தான் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெற்றது, இருப்பினும் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக, இது டிசம்பரில் மாதம் நடைபெற்றது. இந்த மராத்தானில் பங்கேற்க ஏராளமானோர் வந்தனர். இந்த மாரத்தான் போட்டியில் ஒரு அதிசயம் ஓன்று நிகழ்ந்தது. அது என்னெவென்றால் அங்கிதா கவுர் என்ற ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஓருவர் வெறும் 62 … Read more

கடலுக்குள் சுறாவிடம் சிக்கிய கணவரை காப்பாற்றிய கர்ப்பிணி பெண்!

அமெரிக்காவில் கடலுக்குள் சுறாவிடம் சிக்கிய கணவரை காப்பாற்றிய கர்ப்பிணி பெண். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் தனது கர்ப்பிணி மனைவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்ட்ரூ என்பவரும், அவர்களின் குடும்பத்தினரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆண்ட்ரூ படகில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது திடீரென சறுக்கி தண்ணீரில் விழுந்த பொழுது கடலுக்குள் இருந்த சுறாவின் தோளில் அவர் நேரடியாக சென்று விழுந்துள்ளார். சற்று நேரத்திலேயே சுறாவால் அவர் லேசாக தாக்கப்பட்டதால், அவரது ரத்தம் கசிந்து தண்ணீரில் தெரிய … Read more

கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் வைத்து சுமந்து சென்ற கிராம மக்கள் – காரணம் என்ன தெரியுமா?

சட்டீஸ்கரில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை 5 கிலோ மீட்டர் வரை கிராம மக்கள் சுமந்து சென்று உள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜஸ்பூர் ஜாப்லா எனும் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தையும், நகர் புறத்தையும் இணைப்பதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் அவசர தேவைகளுக்கு உடனடியாக வெளியில் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணிக்கு ஏற்பட்ட பிரசவ வலியால் அங்கு சாலை வசதி இல்லாத நிலையில் ஆம்புலன்ஸ் வர … Read more

கொரோனா தாக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த அழகான பெண் குழந்தை.!

ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கடந்த 30-ம் தேதி  ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கியது உறுதியானது.  குழந்தைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க உடனடியாக ஆபரேஷன் மூலம் மருத்துவர்கள் குழந்தையை எடுத்தனர். தற்போது தாயையும், சேயையும் தனிவார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். சீனாவில்  உள்ள  ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு  சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.இதைத்தொடர்ந்து அந்த கர்ப்பிணி பெண்ணை தலைநகர் ஹர்பினில் உள்ள ஒரு மருத்துவமனையில் … Read more

ரயில் நிலையத்தில் ஆச்சிரியம்..! ஒரு ரூபாய்க்கு மருத்துவம் ..!

மகாராஷ்டிரா நேருல் நகரிலிருந்து பான்வவெலுக்கு செல்லும் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பான்வெல் ரயில் நிலை ஊழியர்கள் ரயில் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு மருத்துவரை அணுக அந்நிலையத்தில் கிளினிக்கில் மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் பிரச வலியில் துடிக்கும் பெண்ணுக்கு ரயில்வே நிலைய வளாகத்தில் சிகிச்சை அளித்தார். அவரது சிகிச்சை மூலம் பிரச வலியில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. சிகிச்சை அளித்த மருத்துவர் ஒரு ருபாய் மட்டுமே … Read more

வேட்டை நாய்கள் கடித்து குதறியதில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..!

பிரான்ஸில் எலிசா (29) என்ற இளம்பெண் கர்ப்பமாக இருந்து உள்ளார்.இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த நாயுடன் ரெட்ஸ் வனப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு உள்ளார்.அப்போது வேட்டை நாய்கள் கூட்டமாக வந்து எலிசாவை கடித்து உள்ளது. இதை தொடர்ந்து எலிசா தனது கணவருக்கு போன் மூலமாக அழைத்து தன்னை வேட்டை நாய்கள் கூட்டமாக தாக்கியதாக கூறியுள்ளார்.பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற எலிசாவின் கணவர் இரத்த வெள்ளத்தில் எலிசா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.விரைந்து வந்த போலீசார் … Read more

கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு..!

திருப்பூரில் உள்ள புது ராமகிருஷ்ணாபுரத்தில் தாய் சேய் நல மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவமனைக்கு அதே பகுதியை சார்ந்த ஜோசப் என்பவர் தனது சகோதரி தேவியை  கர்ப்பகால சிகிக்சைக்காக அழைத்து சென்று உள்ளார். மருத்துவமனைக்கு சென்ற தேவிக்கு மயக்கம் ,வாந்தி வந்து உள்ளது.இதை தொடர்ந்து தேவியை பரிசோதனை செய்த மருத்துவர் அருண்ராஜ் ஊசி மூலம் மருந்து கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.பின்னர் செவிலியர் மூலம் தேவிக்கு ஊசி மூலம் மருந்து கொடுத்து உள்ளனர். அப்போது தனது தங்கையை பார்க்கவந்த … Read more