3 நாட்களில் 6 மாவட்டங்களில் கமல்ஹாசன் பரப்புரை

நாளை முதல் இரண்டாம் கட்டமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 3 நாட்களில் 6 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.  இதனிடையே , ரஜினியும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் … Read more

பிக் பாஸ் எடுத்து சமூகத்தை சீரழிக்க கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்

பிக் பாஸ் உள்ளிட்டவை எடுத்து சமூகத்தை சீரழிக்க கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது நடிகர் கமல் ஹாசனை விமர்சித்துப் பேசினார்.செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,பிக்பாஸ் நடத்துகிறவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்.பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி,நன்றாக இருக்கும் குடும்பங்களையும் கெடுக்கிறார்.இப்படிப்பட்ட தலைவர்கள் சொல்கின்ற கருத்துக்களை நீங்கள் சொல்லலாமா? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று … Read more

முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சி – கமல் பதில் ட்வீட்

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி,நன்றாக இருக்கும் குடும்பங்களையும் கெடுக்கிறார் கமல்ஹாசன்  என முதலமைச்சர் பழனிசாமி கூறிய நிலையில் , கமல்ஹாசன் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.  இன்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது நடிகர் கமல் ஹாசன்  குறித்து விமர்சித்துப் பேசினார்.செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,கமல்ஹாசன் புதிதாக கட்சியில் இணைந்தவர். அவருக்கு என்ன தெரியும். பிக்பாஸ் நடத்துகிறவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்.பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி,நன்றாக இருக்கும் குடும்பங்களையும் கெடுக்கிறார்.இப்படிப்பட்ட தலைவர்கள் சொல்கின்ற கருத்துக்களை நீங்கள் சொல்லலாமா? … Read more

எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் ! எதிர்ப்பு தெரிவித்து முறையீடு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்  டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில்  முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அண்மையில்  அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்தது.அதன்படி, தேர்தல் ஆணையம் … Read more

திருட்டில் செழிப்போ செழிப்பு ! அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி – கமல்ஹாசன் ட்வீட்

லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையில், ரூ.6.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்  லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 14 -ஆம் தேதி வரை மேற்கொண்ட சோதனையில் 33 அரசு … Read more

“விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசுக்குத் திட்டம் இருக்குமோ?” – கமல்ஹாசன்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 1ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.610 லிருந்து ரூ.660 ஆகவே உயர்ந்த நிலையில், மீண்டும் எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கையால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.660 லிருந்து ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. 15 நாட்களில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்துள்ளது என்பது கிறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து … Read more

எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான்- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான். நிரந்தரம் என்பது எதிலும் இல்லை, யாரும் கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் பேச்சு. சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் 4வது நாளாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நெல்லை கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அப்போது நாகர்கோவிலில் பேசிய கமல்ஹாசன், எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான். நிரந்தரம் என்பது எதிலும் இல்லை, யாரும் கிடையாது. … Read more

எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன் – கமல்ஹாசன்

எம்.ஜி.ஆர்  என்றென்றும் அவர் மக்கள் திலகம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சித்  தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கமல்ஹாசன் துவங்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி முதலில் மதுரை , … Read more

ஒரு ஓட்டுக்கு 5,00,000 கேளுங்கள் – கமல்ஹாசன் பேச்சு

விருதுநகர் மாவட்டத்தில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ,ஒரு ஓட்டுக்கு 5,00,000 கேளுங்கள் என்று பேசியுள்ளார்.  தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.கூட்டணி குறித்த அறிவிப்பும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நெருங்கும் நிலையில்  சட்டமன்ற தேர்தல் குறித்து கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முதல் … Read more

எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை -பன்னீர்செல்வத்தை சாடிய கமல்ஹாசன்

பெண்களுக்கு இரண்டரை ஆண்டுகளும் சமமாக ஆட்சி புரிய வாய்ப்பளிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறிய நிலையில் அவரை விமர்சிக்கும் வகையில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.  அண்மையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  5 ஆண்டுகால ஆட்சியில் ஆண்களுக்கு இரண்டரை ஆண்டுகளும், பெண்களுக்கு இரண்டரை ஆண்டுகளும் சமமாக ஆட்சி புரிய வாய்ப்பளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கூறினார். இதனிடையே தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் … Read more