எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன் – கமல்ஹாசன்

எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன் – கமல்ஹாசன்

எம்.ஜி.ஆர்  என்றென்றும் அவர் மக்கள் திலகம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சித்  தலைவர் கமல்ஹாசனும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கமல்ஹாசன் துவங்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி முதலில் மதுரை , தேனி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில்,புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல. தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல. என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube