“ஊழலுக்கு எதிரான கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கினார் நீதிபதி கர்ணன்..!

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார். ஊழலுக்கு எதிரான கட்சி என்றும் பெயரை அறிவித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான கட்சி என்ற தனது கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். வரும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.மனித உரிமை அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்ற அவர், மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்களை மட்டும் களத்தில் … Read more

உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி கே.எம். ஜோசப்பை பரிந்துரை செய்யும் முடிவை கொலீஜியம் ஒத்தி வைப்பு..!

நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்ய மீண்டும் பரிந்துரைக்கும் முடிவை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு ஒத்தி வைத்துள்ளது.நீதிபதி கே.எம். ஜோசப்பின் பதவி உயர்வு பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அடுத்து உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் மீண்டும் ஜோசப்பின் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆயினும் ஜோசப்பின் பெயரை பரிந்துரைத்தால் மத்திய அரசுடன் நீதித்துறையின் மோதல் மேலும் அதிகரிக்கும் நிலை உருவானது. … Read more

டெல்லி செல்கிறார் பினராயி விஜயன்

ஒகி புயல் பாதிப்புக்கு நிதி கேட்டு பெற கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி செல்கிறார் மாலை 5 மணிக்கு புயல் சேதம் குறித்த அறிக்கையை ராஜ்நாத்சிங்கிடம் அளித்து நிதி உதவி கோருகிறார்