ஒரு நேரத்தில் 6 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இத்தாலிய பெண்..! அதிர்ச்சியில் மக்கள்..!

இத்தாலிய பெண் ஒருவர் ஆறு டோஸ் ஃபைசர் கோவிட் தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார். கொரோனாவிற்கு பிறகு உலகில் நடந்துகொண்டிருக்கும் தொடர்ச்சியான பல நிகழ்வுகளில் கேள்வி படாத ஒரு கதை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையால் உலகமே பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், தடுப்பூசியை பொறுத்தவரை சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளது.  இரண்டு டோஸ் போதுமானதா அதில் வெவ்வேறு நிறுவனங்கள் கலக்கப்படலாமா அல்லது ஒரு டோஸ் எவ்வளவு … Read more

மீண்டும் இத்தாலியில் நடைமுறைக்கு வரும் ‘wine window’ பழக்கம்!

மீண்டும் இத்தாலியில் நடைமுறைக்கு வரும் ‘wine window’ பழக்கம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த இக்கட்டான கால கட்டத்தில் மக்கள் கண்டிப்பாக சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில்,  இத்தாலியில் உள்ள உணவகம் மற்றும் பார்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு பழங்கால முறைகளில் ஒன்றான,  ‘Wine Window’ பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. உணவகங்களின் கான்கிரீட் … Read more

மூன்று மாதங்களுக்கு பின் இத்தாலியில் திரையரங்குகள் திறப்பு..!

இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் ஓரளவு குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டது. சீனா, வுஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இத்தாலியில் 237,500 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது அதன் தாக்கம் இத்தாலியில் குறைந்துள்ளது. இதன்காரணமாக, அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இத்தாலி நாட்டில் மூன்று மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது. மேலும் … Read more

இத்தாலியில் 9 வாரத்திற்குப் பின் பொது இடங்களில் திரண்ட மக்கள்.!

கொரோனா வைரஸ் பரவலால் முதன் முதலில் ஊரடங்கை அமல்படுத்திய இத்தாலி தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் 2,11,938 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29,079 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை தொடர்ந்து மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே. அதன்பின், மார்ச் 31 ஆம் தேதி கொரோனா பாதிப்பில் இத்தாலி உச்சத்தை … Read more

ஆமையை வாக்கிங் அழைத்து சென்ற மூதாட்டிக்கு ரூ.33,500 அபராதம்.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதிலும்  இத்தாலி , அமெரிக்கா , ஸ்பெயின்  மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை கொரோனா வைரஸ்  அதிகமாக பாதித்து உள்ளது. இந்நிலையில் இத்தாலியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆமையை வாக்கிங் அழைத்துச் சென்ற மூதாட்டிக்கு  ரூ.33,500 அபதாரம் விதிக்கப்பட்டது. இத்தாலியில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவை தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில செயல்கள் மட்டும் அங்கு வீட்டை … Read more

இத்தாலியில் முன்பைவிட நேற்று உயிரிழப்பின் எண்ணிக்கை 431 ஆக குறைவு.!

இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 வாரங்களை விட நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 431 ஆக குறைந்துள்ளது.  சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இத்தாலியில் பரவி கொத்துக்கொத்தாக உயிரை கொன்று வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் திணறியது. இதனால் அந்நாட்டு பிரதமர் இங்கு சவப்பெட்டிகள் இல்லை, புதைப்பதற்கு இடமில்லை என்று கண்ணீர் விட்டு அழுதபடி கூறினார். அந்த அளவுக்கு கொரோனா அந்நாட்டை ஆட்டிப்படைக்கிறது. இந்த நிலையில் இத்தாலிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த 3 … Read more

இத்தாலியை முந்தியது அமெரிக்கா.! உலகளவில் இதுதான் முதலிடம்.!

உலகளவில் இத்தாலியில் தான் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருந்து வந்தது. தற்போது அமெரிக்கா அதை முந்தி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் முதலிடம் வந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றது. இதனால் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் … Read more

இத்தாலியில் தொடரும் சோகம் .! கொரோனாவால் 100 மருத்துவர்கள் உயிரிழப்பு .!

கொரோனா வைரசால் உலக நாடுகளில் தினமும் பாதிப்பும் , உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. அதிலும் அதிகமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அதில் இத்தாலி நாடும் ஒன்று.இங்கு கொரோனாவால் 143,626 பேர் பாதிக்கப்பட்டும் , 18,279 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது. மருத்துவர்களின் தேவை அதிகரித்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவருக்கு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு … Read more

இத்தாலியில் கொரோனாவில் இருந்து மீண்ட 2 மாத குழந்தை.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழப்பின் எண்ணிக்கை 89,907 ஆகவும், வரைஸிலிருந்து குணமடைத்தவர்களின் எண்ணிக்கை 340,349 ஆகவும் உள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, சீனா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரசால் ஐரோப்பிய நாடுகளில் பலவும் கொடூரமாக … Read more

கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்.!

சீனா, வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸான கொரோனா வைரஸ், அந்நாட்டை வாட்டிவதைக்தது. தற்பொழுது உலகளவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்ததுக்கொண்டே வருவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கத்தால் இதுவரை உலகளவில் 6,68,351 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30,890 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக இத்தாலியில் 10,023 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 53 மருத்துவர்களும் அடங்குவர். மேலும், 92,472 பேர் பாதிக்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.