4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா…!

கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பரவல் காரணமாக, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பரவல் காரணமாக, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. … Read more

கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்…!

தமிழகத்தில் ஜூலை 12-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஜூலை 19-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு உடல் வெப்ப நிலை பரிசோதனை … Read more

வயலில் நாற்று நடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான்.!

ஊரடங்கில் சல்மான்கான் வயலில் இறங்கி நாற்று நடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தான் சல்மான்கான்.இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ராதே’. இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக பலர் தங்களது நேரத்தை பல வகைகளில் கழித்து வருகின்றனர். சல்மான்கான் தனது ஊரடங்கு காலத்தை பன்வெல் பண்ணை வீட்டில் கழித்து வருகிறார். அதன் அருகிலுள்ள கிராமத்தில் குதிரைகளுடன் சவாரி … Read more

ஊரடங்கில் போட்டோகிராபராக மாறிய மெகா ஸ்டார்.!

ஊரடங்கில் பிரபல நடிகரான மம்முட்டி அவர்கள் போட்டோகிராபராக உருமாறி அவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மம்மூட்டி. சில தமிழ் படங்களையும் நடித்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் பலர் உடற்பயிற்சி செய்தும், சமையல் செய்தும், புதிய முறைகளை கையாண்டும் உள்ள புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மம்மூட்டி தனது போட்டோஷூட் பணியை மீண்டும் … Read more

இத்தாலியில் 9 வாரத்திற்குப் பின் பொது இடங்களில் திரண்ட மக்கள்.!

கொரோனா வைரஸ் பரவலால் முதன் முதலில் ஊரடங்கை அமல்படுத்திய இத்தாலி தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.  கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் 2,11,938 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29,079 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை தொடர்ந்து மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே. அதன்பின், மார்ச் 31 ஆம் தேதி கொரோனா பாதிப்பில் இத்தாலி உச்சத்தை … Read more