#BREAKING: வரும் சனிக்கிழமை கல்வி நிலையங்கள் செயல்படும் – தமிழக அரசு

நவம்பர் 19-ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு. வரும் சனிக்கிழமை (நவ.19) தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலை நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டதை, ஈடுசெய்ய வரும் சனிக்கிழமை பணிநாளாக அனுசரிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்த நிலையில், 19-ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை மறுநாள்  25-ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் … Read more

#BREAKING: மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ.1000 வழங்க தமிழக அரசு முடிவு. கடந்த தமிழக சட்டப்பேரவையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு … Read more

கல்லூரி, பல்கலை. மாணவர்கள் கவனத்திற்கு – உயர்கல்வி நிறுவனங்களுக்கு, UGC உத்தரவு

சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று UGC உத்தரவு. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறும் பட்சத்தில், அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு, UGC உத்தரவிட்டது. சேர்க்கையை ரத்து செய்தால் அவர்கள் செலுத்திய அனைத்து கட்டணத்தையும், முழுவதுமாக திருப்பியளிக்க வேண்டும் என்றும் சேர்க்கையை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் கூறியுள்ளது. … Read more

#Breaking:நாளை மறுநாள்…அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை -உயர்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில்,எம்பிஏ,எம்சிஏ உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான டான்செட் தேர்வு நாளை மறுநாள்  நடைபெறுவதால் அதில் மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,அண்ணா பல்கலைக்கழகத்தின் https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதள பக்கத்தில் டான்செட் 2022 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் … Read more

#Breaking:படிப்பை முடித்ததும் 180 நாட்களுக்குள் பட்டங்களை தர வேண்டும் – யுஜிசி போட்ட உத்தரவு!

கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்ததும் 6 மாதங்களுக்குள் அவர்களுக்கு பட்டங்களை தரவேண்டும் என யுஜிசி உத்தரவு. பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.தாமதமாக பட்டம் வழங்குவதாக மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் யுஜிசி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும்,மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.பட்டங்களை தாமதமாக வழங்குவது,மாணவர்களின் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் … Read more

அரசு கலைக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – கல்லூரி கல்வி இயக்ககம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் செப்.1ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.58 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 6ம் தேதி … Read more

செப்., 21 முதல் 30ஆம் தேதி வரை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு -சென்னை பல்கலைக்கழகம்.!

கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு வரும் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான … Read more

கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு.! செப்.,15-க்கு பின்னர் தொடங்கும் – அமைச்சர் அன்பழகன்.!

கல்லூரி மாணவர்களுக்கான இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் அவர்களது செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இறுதி ஆண்டு பயிலும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளையும் செப்டம்பர் 15-ஆம் … Read more

#BREAKING: செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  கடந்த 23-ஆம் தேதி தமிழக முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து என அறிவித்தார். அதற்கான அரசாணை தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி,  கடந்த செமஸ்டரில் எடுத்த மதிப்பெண்களின் 30% கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும், நடப்பு பருவத்தில் அக மதிப்பீட்டிலிருந்து (INTERNAL EXAM) 70 % மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணை … Read more