மிக்ஜாம் புயல் – தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்..!

mk stalin

மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சென்னை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் கடல் போல தேங்கி நின்றதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ளப்பாதிப்பை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தாலும், இதுவரை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் சென்னையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையிலும் பணியை தொடரும், தங்களது உடல் நலத்தையோ, குடும்பத்தையோ … Read more

#BREAKING: +2 பொதுத்தேர்வு எப்போது..? முதலமைச்சர் ஆலோசனை..!

+2 பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து கல்வி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பலமுறை ஆலோசனை நடத்திய நிலையில் இன்று முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது..? எப்படி நடத்துவது..? என்பது குறித்து முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோருடன் ஆலோசனையில் … Read more

இந்திய அளவில் #GoBackStalin ஹேஸ்டேக் ட்ரெண்டிங்..!

டுவிட்டரில் இந்திய அளவில் #GoBackStalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னையை விட கோவை மாவட்டம் தான் தினமும் கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

#BREAKING: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி – ஸ்டாலின் அறிவிப்பு ..!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புத் தொகை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டு நிலையில் அவருடைய வருங்காலத்திற்காக பல்வேறு விதமான நிவாரண உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும் அந்த குழந்தை 18 வயதில் … Read more

முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பத்மஸ்ரீ எம். அனந்த கிருஷ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் (92) கடந்த ஒரு வாரமாக நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள  இரங்கல் அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் … Read more

கோவை வருகையின்போது எனக்கு வரவேற்பு பதாகைகள் வேண்டாம் -ஸ்டாலின் ..!

கோவை வருகையின்போது வரவேற்புகளை தவிர்க்க வேண்டும் என  தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நாளை முதல்வர் கோவை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழக அளவில் அளவிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உணவு வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஒரு வார ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. கோவை வருகையின்போது … Read more

#BREAKING: செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம்.., தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கக்கோரி முதல்வர் கடிதம்..!

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தருமாறு பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கிறது. அதனை எதிர்கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் குறிப்பாக தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி பொறுத்த வரையில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த தடுப்புசி போதாது என்ற நிலையில் தமிழக அரசு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் … Read more

20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை மாநகராட்சிக்கு 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை (Oxygen Concentators) மு.க ஸ்டாலின் வழங்கினார்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது ஆக்சிஜன் கருவிகள். தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்கிடையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கான சிகிச்சைக்காக ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு சென்னைக்குட்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை … Read more

காவல்துறை உயரதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை..!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளபோதும் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். தேவையின்றி வருபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தும், வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர். இந்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு சிறப்பாக அமல்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரியுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசிக்கிறார். ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி திரிபாதி, … Read more

#BREAKING: கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு- முதல்வர் ..!

கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்ப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள். மக்களுக்கும், அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இக்காலக்கட்டத்தில் சிறப்பாக இயங்கிவரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட … Read more