சந்திரயானை நினைவூட்டிய பிசிசிஐ! ஐபிஎல் திருவிழாவில் மெய்சிலிர்க்கும் காட்சி..!

IPL - chandrayaan 3

IPL 2024: ஐபிஎல் 2024 தொடக்க விழா பல நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளால் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. ஐபிஎல் 17ஆவது சீசன் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. தொடக்க விழாவை முன்னிட்டு, பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், டைகர் ஷெரப், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அந்த வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிகளை பாராட்டும் வகையில், ஐபிஎல் … Read more

நிலவில் தரையிறங்கிய போது 2.06 டன் புழுதியை கிளப்பிய சந்திரயான்-3! இஸ்ரோ தகவல்!

Chandrayaan3Mission

நிலவில் ஆக.23-ம் தேதி தரையிறங்கிய போது சந்திரயான்-3 விண்கலம் 2.06 டன் புழுதியை கிளப்பியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 (விக்ரம் லேண்டர்) விண்கலம்  பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதைகளில் பயணித்து ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இந்தியாவின் … Read more

2040க்குள் சந்திரனுக்கு இந்தியரை அனுப்ப வேண்டும்.! பிரதமர் மோடி அறிவுறுத்தல்.!

PM Modi meeting with ISRO

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், நிலவில் தடம் பதித்த சந்திராயன்-3 மற்றும் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 ஆகிய இரண்டு திட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது . இதனை அடுத்து தங்கள் அடுத்தகட்ட பயணங்களை நோக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று டெல்லியில் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள், விண்வெளி துறையினர்,விண்வெளி துறையில் இஸ்ரோவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது பிரதமர் மோடி விண்வெளி துறையினருக்கு தனது அறிவுறுத்தல்களை வழங்கினார். அக்.21ல் ககன்யான் … Read more

ககன்யான் திட்டம், 4 வீரர்கள் தேர்வு – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். மேலும் சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.  இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,க‌கன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீர‌ர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வு செய்யப்பட்ட வீர‌ர்களுக்கான பயிற்சி ஜனவரி 3ம் வாரம் தொடங்கும். வேகமாக சென்று நிலவின்மீது மோதியதால் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை. … Read more

600 கோடி ரூபாயில் சந்திரயான் 3 திட்டம் ,மத்திய அரசு அனுமதி – இஸ்ரோ தலைவர் தகவல்

கடந்த ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.  கடந்த  ஆண்டு ஜூலை 22-ம் தேதி  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் … Read more