1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள்…தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு..!

பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3,677 காளைகளுடன் 1,412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த நிலையில் அதில் 1,000 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் மட்டுமே போட்டியில் பங்கேற்க … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எந்த இடத்தில் நடைபெறும்.? வெளியான முக்கிய அறிவிப்பு.!

Alanganallur Jallikattu

ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். 9 வருட பாஜக ஆட்சியே பெரிய பேரிடர் தான்… அமைச்சர் உதயநிதி … Read more

பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடாக விளையாடிய 2 வீரர்கள்..!

பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடாக விளையாடிய 2 வீரர்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுடன்  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளையாடி இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த வீரர்கள் முறைகேடாக விளையாடியதை வருவாய்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மூடுவரப்பெட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் 8 காளைகளை பிடித்து இரண்டாவது இடத்தை இருந்த நிலையில், இவர் சக்கரவர்த்தி என்பவரின் பெயரில் வாங்கிய சீருடையை அணிந்து விளையாடி உள்ளார். … Read more

பலம் பொருந்திய காளைகளோடு சீறிப்பாயும் பாலமேடு ஜல்லிக்கட்டு – மாடு முட்டியதில் ஒருவர் பலியான சோகம்

கோலகலமாக துவங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டில் ஒருவர் பலியான சோகம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்தவரை  மாடு முட்டியதால் உயிரிழந்தார். தை மாதம் இரண்டாம் நாள் எப்போதும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உறுதிமொழி ஏற்புடன் கோலகலமாக தொடங்கியது.காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள்  மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில் 700 காளைகள் சீறிப்பாய உள்ளது. இதனை தழுவதற்காக 936 மாடுபிடி வீரர்கள் களத்தி உள்ளனர்.ஜல்லிக்கட்டு … Read more